ஆரம்ப பொது விடுப்புகள், “பொது விடுப்புகள்” என்றும் “மிதவை” என்றும் அறியப்படுவது, ஒரு நிறுவனம் தனது பொது பங்குபத்திரம் மற்றும் பங்குகளை முதல் முறையாக வெளியிடுவதை குறிப்பதாகும். ஆரம்ப பொது விடுப்புகள் பொதுவாக சிறிய, இளம் நிறுவனங்கள் தமது நிறுவனத்தை விரிவாக்கும் பொருட்டு அதற்கான முதலீட்டை ஈட்டுவதற்கும், பெருக்குவதற்கும் ஏற்பாடு செய்யும் முறையாகும், ஆனால் பெரிய தனியார் நிறுவனங்களும் இது போன்று பொது வர்த்தகம் செய்வதற்கு முனையலாம். ஆரம்ப பொது விடுப்புகள், அதன் வரலாறு, வகைகள், அது வெளியிடப்படும் நேரம், அதற்கான செயல்முறை மற்றும் அதன் நன்மைகள் மற்றும் தீமைகள் பற்றி விரிவாக இந்த கட்டுரையில் நாம் பார்க்கலாம்.
Fill the Form and Get All The Latest Job Alerts
ஆரம்ப பொது விடுப்புகள் என்பது ஒரு நிறுவனம் தனது நிறுவனத்தின் பங்குகளை பங்குச்சந்தையில் பட்டியலிட்டு, விற்பனை செய்ய முன் வரும், ஒரு நடவடிக்கையாகும். இதனால், அந்த குறிப்பிட்ட நிறுவனம், ஒரு பொது நிறுவனமாக மாறுகிறது. அவர்கள் புதிய பங்கு வெளியீட்டை கொண்டு வந்த உடன் அந்த நிறுவனம் இந்திய பத்திரங்கள் மற்றும் பங்குச்சந்தை பரிவர்த்தனை வாரியம் நிர்ணயித்த வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிக்க வேண்டிய நிலை உருவாகும். இவ்வாறு விதிமுறைகள் கடைபிடிக்கப்பட்டு, புதிய பங்கு வெளியீட்டின் மூலம் முதலீடு திரட்ட விண்ணப்பித்து, அதற்கு அனுமதி வழங்கப்படும் போது, பங்குச்சந்தையில் இருந்து அந்த நிறுவனம் நிதியினை திரட்ட முடியும்.
ஒரு நிறுவனம், ஆரம்ப பொது விடுப்பின் மூலமாக, முதலீட்டாளர்களிடம் இருந்து பெருமளவில் பணத்தை ஈட்டி, அதை வரும் காலத்திற்கான விரிவாக்க அல்லது வளர்ச்சித் தேவைகளுக்கு பயன்படுத்துகிறது. நிறுவனத்திற்கு இந்த மூலதனத்தை திருப்பி செலுத்த வேண்டிய கட்டாயம் இல்லை, ஆனால் வரும் காலங்களில் ஈட்டும் இலாபத்தை அனைத்து முதலீட்டாளர்களுடன் பங்கிட வேண்டும், மேலும் நிறுவனம் செயலிழந்து விட்டால், அப்பொழுது அதை விற்பதால் கிடைக்கும் தொகையினையும் சரியான முறையில் பங்கிட வேண்டும்.
மேலும், பங்குச் சந்தையில் ஒரு நிறுவனம் பதிவாகி விட்ட பிறகு, தேவைப்பட்டால், உரிமைகள் வழங்குதல் மூலமாக முதலீட்டாளர்களிடம் இருந்தே மேலும் நிதி திரட்ட வழி இருப்பதால், கடன் இல்லாமலேயே தனது தேவைகளை அவ்வப்போது நிறைவெற்றிக்கொள்ளலாம். தனிப்பட்ட முதலீட்டாளர்களிடம் இருந்து ஒவ்வொரு முறையும் நிதி திரட்ட வேண்டிய அவசியம் இல்லாமல், வேண்டிய பொழுது நேராக பொது மக்களான முதலீட்டாளர்களிடம் இருந்தே, நிதி திரட்டுவதற்கு இப்படி ஒரு அமைப்பு இருப்பதால், இதையே நிறுவனங்கள் விரும்புகின்றனர் மேலும் பங்குச் சந்தையில் பதிவு செய்து கொள்வதற்கு இதுவே மூல காரணமாகும்.
Also Read: Education System in Tamil Nadu | தமிழ்நாட்டில் கல்வி முறை – Part 2
பொதுப் பங்குகளை வர்த்தகத்தில் ஈடுபடுத்தும் நிறுவனத்தின் ஆரம்ப வடிவத்தை, ரோமானியக் குடியரசின் பப்ளிகனி (PUBLICANI) இன் மூலம் அறியலாம். நவீன பங்கு நிறுவனங்களைப் போலவே, பப்ளிகனியும் பங்குகளை வைத்திருக்கும் நவீன நிதி நிறுவனங்களின் சட்டப்பூர்வ அமைப்புகளுக்கு ஒத்ததாக இருந்தது.
IPO க்களுக்கு அதன் தற்போதைய வடிவங்களை வழங்கிய நவீன நிதி அமைப்பின் முன்னோடியாக டச்சுக்காரர்கள் பாராட்டப்படுகிறார்கள். IPO இன் முதல் அறியப்பட்ட பதிவு நிகழ்வு மார்ச் 1602 இல் டச்சு கிழக்கிந்திய நிறுவனம், புதிய நிதி திரட்டுவதற்காக அதன் பங்குகளை வழங்கியபோது நடந்தது.
எனவே டச்சு கிழக்கிந்திய நிறுவனம், பொது மக்களுக்கு பத்திரங்கள் மற்றும் பங்குகளை வழங்கும் முதல் நிறுவனமாக மாறியது, மேலும் அதிகாரப்பூர்வ பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட முதல் பொது வர்த்தக நிறுவனமாக மாறியது.
Also Read: Education System in Tamil Nadu | தமிழ்நாட்டில் கல்வி முறை – Part 1
ஆரம்ப பொது விடுப்புக்களை நாம் மூன்று வகையாகப் பிரிக்கலாம்.
Download Now : Weekly Current Affairs in Tamil 3rd Week of November 2021
‘எப்போது பங்கு வெளியிட வேண்டும் என்பதை நிறுவனம் முடிவு செய்யும். அது முதலீட்டாளருக்கு சாதகமாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை’ என்று புதிய பங்கு வெளியீட்டை பற்றி வாரன் பஃபெட் கூறியுள்ளார்.
பங்குகளை பொது மக்களுக்கு வெளியிட முடிவு செய்த நிறுவனம், சரியான நேரத்துக்குக் காத்திருக்கும். பங்கு வெளியீட்டுக்கு அதிகபட்ச விலை கிடைக்கும் சூழ்நிலை இருந்தால்தான் பங்குகளை வெளியிட முன்வரும். அதனால்தான் பெரும்பாலான IPO க்கள் பங்குச் சந்தை உச்சநிலையில் இருக்கும்போது வெளி வருகின்றன.
Also Read: Best Study Materials For TNPSC | டிஎன்பிஎஸ்சிக்கான சிறந்த பாட புத்தகங்கள்
போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இக்கட்டுரை TRB, TNPSC GROUP 2 & 2A, GROUP 1, க்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளது.
*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*
*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*
Adda247App | Adda247 Tamil Youtube
Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group
Daily Current Affairs - நடப்பு நிகழ்வுகள், TNPSC குரூப் 1, TNPSC குரூப் 2/2A, TNPSC குரூப் 4,…
Decoding RPF Constable & SI Recruitment 2024: The document provided is a comprehensive guide for…
"TNPSC Special Guide" என்பது தமிழ்நாட்டில் நடைபெறும் பல்வேறு மாநில அளவிலான போட்டித் தேர்வுகளுக்கான தயாரிப்புக்கு உதவும் வகையில் கவனமாக…
TNPSC CCSE-குரூப் I-B & I-C TNPSC ஒவ்வொரு ஆண்டும் வெவ்வேறு பதவிகளுக்கு ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வை (CCSE)…
இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…
RPF அறிவிப்பு 2024: ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) 4660 சப் இன்ஸ்பெக்டர் மற்றும் கான்ஸ்டபிள் பணிக்கான RRB அறிவிப்பை…