Tamil govt jobs   »   Latest Post   »   TNPSC பொருளாதார இலவச குறிப்புகள் - பசுமைப்புரட்சி

TNPSC பொருளாதார இலவச குறிப்புகள் – பசுமைப்புரட்சி

இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB, TRB, TET, TNEB போன்றவற்றுக்கான  முறைகள் இலவசக் குறிப்புகளைப் பெறுவீர்கள்.தேர்வுக்கு தயாராவோர் இங்குள்ள பாடக்குறிப்புகளை படித்து பயன்பெற வாழ்த்துகிறோம்.

பசுமைப்புரட்சி:

அறிமுகம்:

  • இந்தியாவின் பொருளாதாரச் செயல்பாடுகளில் வேளாண்மைத் தொழில் தான் மிகவும் அடர்த்தியாகச் செயல்படும் தொழிலாக உள்ளது. இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வேளாண்மையின் பங்கு 12-15% ஆகும். 
  • அதிகரித்து வரும் மக்கள் தொகைப் பெருக்கத்தால் உணவு தானியங்களின் தேவையைத் தொடர்ந்து நிறைவு செய்வதற்காக மட்டுமல்லாமல் மிகப்பெரும் எண்ணிக்கையில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் தொழிலாகவும், உணவுப்பொருள்கள் உற்பத்தியின் மூலமாக வேளாண் தொழில்கள் பெருகவும், ஏற்றுமதி மூலம் அன்னிய செலவாணி ஈட்டவும் பெரும்பங்களிப்பு ஆற்றுகிறது. 
  • வேளாண்மை என்பது வெறும் உணவுதானிய விளைச்சலை மட்டும் குறிக்கவில்லை, மாறாக தென்னை வளர்ப்பு, தோட்டங்கள், முந்திரி, காபி, தேயிலை, மிளகு, காய்கனிகள் என பணப் பயிர்கள் வளர்ப்பையும் உள்ளடக்கியது ஆகும்.
  • இந்தியா விடுதலை அடைந்ததைத் தொடர்ந்து அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப இந்திய வேளாண்துறையை வளர்ப்பதன் அவசியம் குறித்து உணரப்பட்டது. இருந்தபோதும் இதுவரை நடைமுறைப் படுத்தப்பட்ட 1 முதல் 12 ஐந்தாண்டுத் திட்டங்களிலும் வேளாண்துறைக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம் வேறுபாடானவை ஆகும். 
  • ஏனெனில், விடுதலையைத் தொடர்ந்த தொடக்க ஆண்டுகளில் புதிய தொழில்கள் தொடங்கவும் தொழிற்துறையைப் பலப்படுத்தவும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. விடுதலையை அடுத்த 10 ஆண்டுகளில் மக்கள்தொகை ஆண்டுக்கு 2.5% அதிகரித்துவந்தது. 
  • இதனால் பாரம்பரிய முறை விவசாயம் மூலம் உணவுப்பொருள்கள் தேவையை ஈடுகட்ட முடிந்தது. ஆனால், 1960களில் மக்கள் தொகைப் பெருக்கத்துக்கு ஏற்ப உணவுத் தேவையை ஈடுகட்டுவதில் பற்றாக்குறை ஏற்படத் தொடங்கியது. ஏனெனில், மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய உணவு தானிய உற்பத்தி அதிகரிக்கவில்லை இது பசுமைப் புரட்சிக்கு வழிவகுத்தது.

இந்தியாவில் பசுமைப்புரட்சி:

  • இந்தியா அடிப்படையில் ஒரு வேளாண்மை நாடு என்பதும் அதிகரித்து வரும் மக்கள்தொகை வேளாண்மையைச் சார்ந்துள்ளது என்பதும் நாம் அறிந்ததே. நாட்டின் முதல் இரண்டு ஐந்தாண்டுத் திட்டங்கள் அளித்த அனுபவங்கள் காரணமாக வேளாண்மையில் நிலவும் தீவிரமான பற்றாக்குறை உணரப்பட்டது. அவை வருமாறு:
  • மக்கள்தொகைப் பெருக்கத்துக்கு ஏற்ப உணவு தானிய உற்பத்தியை     அதிகரிக்க இயலவில்லை. பாரம்பரிய விவசாய முறைகளே பின்பற்றப்பட்டதால் இந்த பற்றாக்குறை ஏற்பட்டது.
  • பாரம்பரிய வேளாண்மை முறைகளைப் பின்பற்றியதோடு மட்டுமல்லாமல் நீண்டகால சாகுபடி முறையையே விவசாயிகள் தேர்ந்தெடுத்தனர். இதனால் விளைச்சல் காண அதிகநாள்கள் காத்திருக்க வேண்டியிருந்தது.
  • இந்தியா ஒரு பருவமழை சார்ந்தநாடு என்பதால் மழைப்பொழிவைப் பொருத்தே விளைச்சல் இருந்தது. மழைப்பற்றாக்குறை ஏற்பட்டபோது வறட்சி உருவாகி, உணவு தானிய விளைச்சலைப் பாதித்தது. இதனால் பஞ்சம், பட்டினி, இறப்பு ஏற்பட்டன.
  • 1960-களின் போது ஃபோர்ட் அறக்கட்டளை பரிந்துரைகள் அடிப்படையில் புதிய வேளாண் கொள்கை உருவாக்கப்பட்டது. இந்தியாவின் உணவு நெருக்கடியும் அதை எதிர்கொள்ளும் வழிகளும் எனும் தலைப்பில் அளிக்கப்பட்ட அந்த பரிந்துரை அறிக்கையில் அதிக விளைச்சல் அளிக்கும் விதைகளைப் பயன்படுத்துதல் இவேளாண் நடவடிக்கைகளை இயந்திர மயமாக்குதல் மூலம் உற்பத்திமுறைகள் தீவிரமாதல், போதுமான உரங்களைப் பயன்படுத்துதல், விளைச்சலைச் சேமிக்கும் முறைகள், விளைப்பொருள் வீணாவதைத் தவிர்க்கும் முறைகள் போன்ற முன்னேற்றம் காணப்பட்டு உணவுத்தேவையை நிறைவு செய்ய இயலும் என்று வல்லுநர்கள் கூறியிருந்தனர்.
  • இப்பரிந்துரைகளை ஏற்று அமல்படுத்தி மெக்சிகோ பெரும் வளர்ச்சி கண்டிருந்தது.பிலிப்பைன்ஸ் நாடும் விவசாய உற்பத்தியில் தன்னிறைவு காண பரிந்துரைகளை ஏற்றது. ஃபோர்ட் அறக்கட்டளையின் பரிந்துரைகளை இந்திய அரசு 1959 – 60 ஆம் ஆண்டு ஏற்று வேளாண் சீர்திருத்தங்களை அறிமுகம் செய்தது. 
  • இச்சீர்திருத்தங்கள் ஒரு கலப்புத்திட்டமாக அமைந்தன. ஏற்கனவே நடைமுறையில் உள்ள பாசன முறைகளுடன் புதிய பாசன வசதிகள் ஏற்படுத்துவது, உரமிடல் முறை, அதிகமாக வசூல் தரும் வீரிய விதைகள், பூச்சுக்கொல்லிகள் போன்ற இடுபொருள்கள் அறிமுகம் ஆகியனவற்றை உள்ளடக்கியதாக சீர்திருத்தங்கள் அமைந்தன.
  • இந்த புதிய வழி படிப்படியாக இந்திய விவசாயத்தில் பின்பற்றப்பட்டது. இதுவே பசுமைப் புரட்சி என அழைக்கப்படும். இத்திட்டம் வேளாண் அறிவியலாளர் M.S.சுவாமிநாதன் அவர்களால் உருவாக்கப்பட்டது. இதனால் இவர் “பசுமைப் புரட்சியின் தந்தை என அழைக்கப்படுகிறார்.
  • சுருக்கமாகக் கூறினால் பாசன வசதிகள் அதிகரிப்பு, புதிய உரங்களின் பயன்பாடு ஆகியனவே இந்திய பசுமைப்புரட்சி என அறியப்படுகிறது. பசுமைப் புரட்சியின் மூலம் 1967-78 இல் வேளாண் உற்பத்தி 50% அதிகரித்தது.
  • முதல்கட்டமாக, 1960இல் ஏழு மாநிலங்களில் ஏழு மாவட்டங்கள் முன்மாதிரி மாவட்டங்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அடர்த்தியான பகுதி மேம்பாட்டுத்திட்டம் (IADP) எனும் பெயரில் செயல்படுத்தப்பட்டது இதன் விளைவுகள் திருப்தியாக இருந்ததால் பிற மாநிலங்களுக்கும், மாநிலத்துக்கு ஒரு மாவட்டம் என விரிவுபடுத்தப்பட்டது. 
  • எனவே, இந்த திட்டம் மீதமுள்ள மாநிலங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது, மேலும் ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் ஒரு மாவட்டம் தீவிர வளர்ச்சிக்கு தேர்வு செய்யப்பட்டது. இது1965இல் 144 மாவட்டங்கள் என மேலும் விரிவடைந்தது.
  • தொடக்கத்தில் 2 மில்லியன் ஹெக்டேர் நிலங்களில் செயல்படுத்தப்பட்டது. படிப்படியாக மேலும் விரிவுபடுத்தப்பட்டு 70மில்லியன் அதாவது 7 கோடி ஹெக்டேர் நிலங்களில் செயல்படுத்தப்பட்டது இது, இந்தியாவின் மொத்த நிலங்களில் 40% ஆகும் இந்த மாபெரும் வெற்றியே பசுமைப் புரட்சியாக எழுச்சி கண்டது.
  • இதன் விளைவாக ஆண்டு முழுவதும் வேளாண் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆண்டுக்கு ஒரு போகம் என்ற நிலைமாறி இரண்டு போகம், மூன்று போகம் என காணப்பட்டன. இதனால் நெல், கோதுமைப் போன்ற பாரம்பரிய பயிர்கள் மட்டுமல்லாமல் மற்ற பயிர்களும் அறிமுகம் செய்யப்பட்டன. 
  • நாட்டின் பல பகுதிகளில் மாறுபட்ட தட்ப வெட்பநிலைகள் நிலவும் நாட்டில் மாறுபட்ட பயிரிடும் முறைகள் பின்பற்றப்படுகின்றன.  கோதுமை விளைவிக்கும் பஞ்சாப், ஹரியானா, உத்திரப்பிரதேசம் போன்ற வடமாநிலங்களில் துரிதமாகவே நல்விளைவுகள் காணப்பட்டன;
  • நெல் பயிரிடும் தென்மாநிலங்களான தமிழ்நாடு, கர்நாடகம், போன்ற மாநிலங்கள் குறைவான வெற்றி காணப்பட்டன இருப்பினும், ஒட்டுமொத்தமாக விளைச்சல் அதிகரித்து உணவுப்பற்றாக் குறை சிறப்பாகத் தணிக்கப்பட்டது.

பசுமைப் புரட்சியின் முக்கிய தாக்கங்கள்:

வேளாண் உற்பத்தி தொடர் அதிகரிப்பு:

  • 1950-களில் காலக்கட்டத்தோடு ஒப்பிடுகையில் வேளாண் உற்பத்தி இரண்டிலிருந்து மூன்று மடங்குகள் அதிகரித்தது 1950-களில் நிலவிய உணவு பற்றாக்குறை காரணமாக உணவு தானியங்களை PL40 திட்டத்தின் கீழ் அமெரிக்காவிலிருந்து உணவுத் தானியங்களை இந்தியா இறக்குமதி செய்ய வேண்டியிருந்தது.அரிசி, கோதுமை பருப்பு வகைகள் மற்றும் காய்கறிகள் உற்பத்தி அதிகரிப்பின் காரணமாக இன்று நிலைமை மாறியது. மேலும் வெளிசந்தையிலும் விவசாய உற்பத்திப் பொருள்கள் தாராளமாக கிடைக்கின்றன.

வேளாண் வேலைவாய்ப்புகள் அதிகரிப்பு:

  • ஆண்டு முழுவதும் விவசாய நடவடிக்கைகள் தொடர்ந்தால் விவசாய வேலைவாய்ப்புக்கான தேவை அதிகரித்தது.

 

வேளாண்மை, தொழிற்துறை மற்றும் சந்தை:

  • இந்தியாவில் கொண்டு வரப்பட்ட பசுமைப் புரட்சியின் விளைவாக வேளாண் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டது மட்டுமல்லாமல் சந்தைக்கும் தொழிற்துறைக்கும் இடையிலான ஆரோக்கியமான உறவுகள் ஏற்பட்டது. அறிவியல்முறை, வேளாண்மை, டிராக்டர்கள், உபகரணங்கள் போன்ற வேளாண் பொறியியல் சார்ந்து இருந்ததால் அதிகரித்து வரும் தேவையை உணர்ந்த தொழிற்துறையும் இத்தகைய வேளாண் உபகரணங்களை குறைந்த விலைக்கு உற்பத்தி செய்வதில் ஆர்வம்காட்டினர்.    

 

மாநிலங்களுக்கிடையிலான பரிமாற்றம் மற்றும் சந்தை முறை:

  • பசுமைப் புரட்சியின் போது இந்தியாவில் பல மாநிலங்கள் எதிர்கொள்ள நேர்ந்த முக்கிய பிரச்சனை என்பது மண்வளமிக்க மாநிலங்கள் மற்றுமே பயன் பெற்றது. ஆகையால், அதிகமாக உற்பத்தி செய்யப்படும் மாநிலங்கள் தங்கள் உற்பத்தியை விதர்பா மற்றும் தெலுங்கானா போன்ற காலநிலை வறண்ட மற்ற மாநிலங்களுக்கு விநியோகித்தன.

 

**************************************************************************

Tamilnadu mega pack
Tamilnadu mega pack
இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
Adda247 TamilNadu Home page Click here
Official Website=Adda247 Click here