Gupta Empire In Tamil: The Gupta Empire (320 – 551 AD) was one of the largest empires in the Indian subcontinent. Present-day Pakistan, India, and Bangladesh were part of the Gupta Empire. The period of the Gupta dynasty is referred to as the Golden Age of India due to excellence in the fields of science, mathematics, astronomy, religion, and Indian philosophy. Read the full article for the complete details of the Gupta Empire.
Fill the Form and Get All The Latest Job Alerts
குப்தப் பேரரசு (ஆட்சிக் காலம்: கி பி 320 – 551) இந்தியத் துணைக்கண்டத்தின் பெரும் பகுதிகளை ஆண்ட பேரரசுகளில் ஒன்றாக விளங்கியது. குப்தப் பேரரசு பகுதிகளாக இன்றைய பாகிஸ்தான், இந்தியா, வங்காளதேசம் ஆகிய நாடுகள் அமைந்திருந்தன. குப்த அரச வம்சத்தை நிறுவியவர் ஸ்ரீகுப்தர் எனக் கருதப்படுகிறார். அவர் தற்போதைய வங்காளம், பீகார் பகுதிகளை ஆண்டதாகக் கருதப்படுகிறது. நாணயங்களில்முதன்முதலாக இடம் பெற்ற குப்த அரசரின் வடிவம் இவருடையதே. இவருக்குப் பின்னர் இவருடைய மகன் கடோத்கஜர் அரசப் பதவியேற்றார். கல்வெட்டுகளில் இவர்கள் இருவருமே மகாராஜா என்றே குறிப்பிடப்பட்டுள்ளனர். வட இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் அலகாபாத் என தற்போது அழைக்கப்படும் பிரயாகை பகுதியே குப்தர்களின் தாயகம் என ஜெய்ஸ்வால் போன்ற வரலாற்று அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள். பார்சிவா ஆட்சிப் பகுதியான பிரயாகை பகுதியே குப்த வம்சத்தினர் தோற்றம் எனக் கருதுகிறார்கள். சில வரலாற்று ஆய்வாளர்கள் வடக்கு அல்லது நடு வங்காளமே குப்தர்களின் தாயகம் என கருதுகிறார்கள்.
Read More: Pala Empire in Tamil – Origin, Rise and legacy of a Dynasty
S.No | Navaratna of Chandragupta II |
1 | Kalidasa (Poetry – Ritusamhar, Meghadutam, Kumarsambhavam, Raghuvamshama; Dramas Malvikagnimitra, Vikramorvashiyam, AbhijnanShakuntalam) |
2 | Amarsinh (Amarsinhkosha). |
3 | Dhanavantri (Navanitakam – medicine text) |
4 | Varahmihira (PanchSidhantaka, Vrihatsamhita, VrihatJataka, Laghu Jataka) |
5 | Araruchi (Vartika – a comment on Ashtadhyayi) |
6 | Ghatakarna |
7 | Kshapranak |
8 | Velabhatt |
9 | Shanku. |
Emperor Ashoka in Tamil, Life and History
இரண்டாம் சந்திரகுப்தருக்குப் பிறகு அவரது மகன் முதலாம் குமாரகுப்தர் ஆட்சிக்கு வந்தார். முதலாம் குமாரகுப்தர் நாளந்தாவில் பௌத்த சமயம் மற்றும் அறிவியல் போன்ற கல்விகளைப் பயில நாளந்தா பல்கலைக்கழகத்தை நிறுவினார். தற்போது நாளாந்தா பல்கலைக்கழகம், யுனேஸ்கோ அமைப்பால் 15 சூலை 2016-இல் உலகப்பாரம்பரியக் களங்ளில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ளது. தில்லியிலுள்ள கல்வெட்டுக் குறிப்புகளுடன் கூடிய தில்லி இரும்புத் தூண் குமாரகுப்தன் காலத்தில் நிறுவப்பட்டது.
முதலாம் குமாரகுப்தருக்குப் பின் ஆட்சிக்கு வந்த ஸ்கந்தகுப்தர் குப்தப் பேரரசின் ஆட்சியாளர்களில் எட்டாவதும் மற்றும் இறுதி பேரரசராகவும் கருதப்படுகிறார். புஷ்யமித்திர சுங்கனை போரில் வென்ற ஸ்கந்தகுப்தர், கி பி 455-இல் நடு ஆசியாவிலிருந்து, குப்தப் பேரரசின் வடமேற்கு பகுதிகளை முற்றுகையிட்டு தொடர் தாக்குதல்களை நடத்திய வெள்ளை ஹூணர்கள் எனப்படும் ஹெப்பதலைட்டுகளை போரில் விரட்டி அடித்த போதிலும், கி பி 455 தொடங்கி குப்தப் பேரரசின் நிதி மற்றும் பொருளாதாரம் வற்றியது. கி பி 467-இல் ஸ்கந்தகுப்தரின் மறைவிற்குப் பின் அவரது பங்காளி முறை சகோதரன் புருகுப்தர் 467-இல் குப்தப் பேரரசின் மன்னரானர்.
Indus Valley Civilization in Tamil, Harappan Civilization for TNPSC
காமாந்தகரால் எழுதப்பட்ட நிதிசாரம் எனும் நூல் அரசுக் கருவூலத்தின் முக்கியத்துவத்தையும் வருமானத்திற்கான பல வழிகளையும் குறிப்பிடுகின்றது. சமுத்திரகுப்தரைப் போன்ற அரசர்களின் படையெடுப்பு நடவடிக்கைகளில், வருவாயின் உபரியே முதலீடு செய்யப்பட்டது.
நிலவரியே அரசின் முக்கிய வருவாயாக இருந்தது. விவசாயிகளின் நிலைமை பரிதாபகரமாக இருந்தது. அவர்கள் பலவேறு வரிகளைச் செலுத்த வேண்டிய நிலையில் இருந்தனர். அவர்கள் கொத்தடிமை நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
குப்தர் காலத்தில் நிலங்களை வகைப்படுத்துதல் | |
க்ஷேத்ரா | வேளாண்மைக்கு உகந்த நிலங்கள் |
கிலா | தரிசு நிலங்கள் |
அப்ரகதா | வனம் அல்லது காட்டு நிலங்கள் |
வஸ்தி | குடியிருப்பதற்கு உகந்த நிலங்கள் |
கபத சரகா | மேய்ச்சல் நிலங்கள் |
குப்தர்களின் பொருளாதார வளர்ச்சிக்கு வணிகர்களின் பங்களிப்பு மிகவும் போற்றத்தக்கதாக இருந்தது. வணிகர்களில் இரண்டு வகையினர் இருந்தனர். ‘சிரேஸ்தி’ மற்றும் ‘சார்த்தவாகா’ என அவர்கள் அழைக்கப்பட்டனர்.
சிரேஸ்தி | சார்த்தவாகா |
சிரேஸ்தி பிரிவைச் சார்ந்த வணிகர்கள் ஓரிடத்தில் நிலையாக இருந்து வணிகம் செய்தவர்கள் | சார்த்தவாகா வணிகர்கள் எருது பூட்டிய வண்டிகளில் சரக்குகளை ஏற்றி பல்வேறு இடங்களுக்குச் சென்று வணிகம் செய்தவர்கள். |
நாட்டின் பலபகுதிகளை இணைக்கும் சாலைகளைக் குப்தர்கள் அமைத்தனர். பாடலிபுத்திரம், உஜ்ஜைனி, வாரணாசி, மதுரா ஆகியன முக்கிய வணிக நகரங்களாக இருந்தன. இந்தியாவில் உள்ள மேலைக் கடற்கரைத் துறைமுகங்களும் (கல்யாண், மங்களூர், மலபார் ) கீழைக் கடற்கரைத் துறைமுகமும் (வங்காளத்திலிருந்த தாமிரலிப்தி) வணிகப் பெருக்கத்திற்கு உதவின.
வேத மதமும் வேதச் சடங்குகளும் புத்துயிர் பெற்று, மீண்டும் நடைமுறைக்கு வந்தன. சமுத்திரகுப்தரும் முதலாம் குமாரகுப்தரும் அஸ்வமேத யாகம் (குதிரைகளைப் பலி கொடுத்துச் செய்யப்படும் வேள்வி) நடத்தினர். குப்தர்கள் காலத்தில்தான் உருவ வழிபாடு தொடங்கியதையும் வைணவம், சைவம் ஆகிய இரு பிரிவுகள் தோன்றியதையும் காண்கிறோம். ஹீனயானம், மகாயானம் எனப் பௌத்தம் இரண்டாகப் பிரிந்தாலும் அது தொடர்ந்து வளர்ந்துவந்தது.
***************************************************************************
இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை
பதிவிறக்கம் செய்யுங்கள்
To Attempt the Quiz on APP with Timings & All India Rank,
Download the app now, Click here
Adda247 பயன்பாட்டில் இந்த வினாடி வினாவை முயற்சிக்க இங்கே கிளிக் செய்து அகில இந்திய தரவரிசையைப் பெறுங்கள்
Home page | Adda 247 Tamil |
Latest Notification | TNPSC Recruitment 2023 |
Official Website | Adda247 |
*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*
*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*
Adda247App | Adda247 Tamil Youtube
Tamil Engineering Classes by Adda247 Youtube link
Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group
Instagram = Adda247 Tamil
Chandra Gupta 1 was the first king of the Gupta dynasty
இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…
இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…
இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…
இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…
இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…
TNPSC குரூப் 4 வயது வரம்பு 2024: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஒவ்வொரு ஆண்டும் TNPSC குரூப்…