How Many High Court in Tamil Nadu: High court refers to conceptually ‘higher’ court than court of first instance. For countries with civil law system, the term ‘High court’ usually refers to appellate court dealing with first stage of appeal in chain of appellate procedure, as court of second instance, which is a lower court than the supreme court.Read the Article to know detailed information about How Many High Court in Tamil Nadu.
Fill the Form and Get All The Latest Job Alerts
இந்தியாவின் நீதியாண்மை அமைப்பு, அதன் உச்ச நீதிமன்றத்தால் வரையறுக்கப்பட்டதாகும். இதன் படி அமைக்கப்பட்ட 25 இந்திய உயர் நீதிமன்றங்கள், தமது வரம்பிற்குட்பட்ட மாநிலங்களில் நீதிமுறைப் பணிகளை செலுத்துகின்றன. இந்தியாவின் மாநிலங்கள் மற்றும் ஒன்றிய பகுதிகள், இவற்றின் நீதியாண்மையின் கீழ் வருகின்றன. உயர் நீதிமன்றங்களுக்கு கீழ், உரிமையியல் நீதிமன்றங்கள், குடும்ப நல நீதிமன்றங்கள், குற்றவியல் நீதிமன்றங்கள் (கிரிமினல்) மற்றும் இதர மாவட்ட நீதிமன்றங்கள் செயல்படுகின்றன. உயர் நீதிமன்றங்களின் மூல நீதிமுறைமையின் முதன்மையானது, மாநிலத்தின் உரிமையியல் (சமூக நலன்) நீதிமன்றங்களை உள்ளடக்கியது ஆகும், மற்றும் தண்டிக்கப்படக்கூடிய குற்றங்கள், மரண தண்டணை விதிக்கக்கூடிய குற்றங்களை விசாரிப்பதும் அகும். Tamil Nadu High Court தொடர்பான தகவல்களை, நாம் இந்த கட்டுரையில் விரிவாக பார்ப்போம்.
உதாரணமாக, நடுவர் மன்றம், ஒப்பந்தம், நிறுவனச் சட்டம், பதிப்புரிமை, நீதிமன்றங்கள்-தற்காப்பு, குற்றவியல் சட்டம் மற்றும் நடைமுறை, வரிச் சட்டம், காப்பீடு, தனிப்பட்ட காயம், சொத்துச் சட்டம், குடும்பச் சட்டம், வர்த்தக நடைமுறைகள் போன்றவை இதில் அடங்கும். நீதிமன்றத்தின் பெரும்பாலான பணிகள் தொடர்புடையவை மற்ற நீதிமன்றங்களின் தீர்ப்புகளுக்கு எதிரான மேல்முறையீடுகளின் விசாரணை.
இது 74 நீதிபதிகள் மற்றும் ஒரு தலைமை நீதிபதியைக் கொண்டுள்ளது, அவர்கள் நீதி நிர்வாகத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பொதுக் கொள்கையின் பொறுப்பில் உள்ளனர்.
What is the Traditional Dress of Tamil Nadu?
குற்றவியல் மற்றும் சிவில் நீதிமன்றங்கள், பொது அதிகார வரம்பு மற்றும் வரையறுக்கப்பட்ட அதிகார வரம்பு நீதிமன்றங்கள் மற்றும் மேல்முறையீட்டு மற்றும் விசாரணை நீதிமன்றங்களுக்கு இடையே அடிப்படை வேறுபாடுகள் செய்யப்பட வேண்டும். அரசியலமைப்பு, கூட்டாட்சி மற்றும் நாடுகடந்த நீதிமன்றங்களும் உள்ளன.
மதராசு உயர் நீதிமன்றம், இந்தியாவின் மாநிலமான தமிழகத்தின் தலைநகரான சென்னையில் அதன் சிறப்பை உயர்த்துவதில் முக்கிய இடமாக விளங்குகின்றது. இந்த உயர்நீதிமன்றம் உலகின் இரண்டாவது மிகப்பெரிய நீதிமன்ற வளாகமென்று நம்பப்படுகிறது.
இந்தியா சுதந்திரம் அடைவதற்கு நூறாண்டுகளுக்கு முன்பாகவே, நீதிமன்றங்களை பிரித்தானிய அரசு இந்தியாவில் நிறுவியது. அப்படி நிறுவப்பட்ட மூன்று நீதிமன்றங்களில் ஒன்றுதான், சென்னை உயர்நீதி மன்றம். மற்ற இரண்டு நீதிமன்றங்களில், ஒன்று மும்பையிலும் மற்றொன்று கொல்கத்தாவிலும் நிறுவப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றம் ஜூன் 26, 1862, ஆம் ஆண்டு இந்தியாவின் மூன்று உயர்நீதிமன்றங்களில் ஒன்றாக, சென்னை இராஜதானி நகரத்திற்கு விக்டோரியா பேரரசியின் அரசாட்சியில் வழங்கப்பட்ட காப்புரிமையின்படி நிறுவப்பட்டது. இதன் நீதிபரிபாலனை தமிழ்நாடு மற்றும் புதுவையை உள்ளடக்கியது.
தொடக்கத்தில், ‘சுப்ரீம் கோர்ட் ஆஃப் மெட்ராஸ்’ என்றுதான் அழைக்கப்பட்டது. அதன் பிறகு உயர் நீதிமன்ற சட்ட வரைவுகள் ஏற்படுத்தப்பட்டு, 1862 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் முதல் ‘மெட்ராஸ் ஹை கோர்ட்’ என்ற பெயர் மாற்றம் பெற்றது.
1996 ஆம் ஆண்டு மதராசு என்பது சென்னை என்று சட்டப்பூர்வமாக பெயர் மாற்றம் கண்டபொழுது, உயர்நீதிமன்றம் அதிலிருந்து விலக்கு பெற்று அதன் பாரம்பரியப் பெருமைக்காக மதராசு உயர்நீதிமன்றம் என்றே அழைக்கப்பட்டு வந்தது. 2016 ஆம் ஆண்டு ஜூலை மாதம், மதராசு உயர்நீதிமன்றம் என்ற பெயரை சென்னை உயர்நீதிமன்றம் என்று மாற்ற மத்திய அரசு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.
இந்த நீதிமன்றத்தோடு சேர்ந்து அமைக்கப்பட்ட மூன்று உயர்நீதி மன்றங்களில் மற்ற இரண்டான மும்பை, கொல்கத்தா நீதிமன்றங்கள் உச்சநீதிமன்றங்களாக, 1861 உயர்நீதிமன்ற சட்ட வரைவிற்கு முன்பு வரை செயல்பட்டுக் கொண்டிருந்தன.
இதன் கட்டுமானம் இந்தோ-சார்சியனிக் முறையில், 1888 ஆம் ஆண்டு ஜே.டபிள்யூ.பிராஸிங்டன் என்பவரால் வடிவமைக்கப்பட்டு, 1892 இல் ஹென்றி இர்வின் வழிகாட்டுதலின்படி கட்டப்பட்டு முடிக்கப்பட்டது. இதன் கட்டுமானம் செப்டம்பர் 22, 1914 இல் முதல் உலகப்போரின் துவக்கத்தின் போது செர்மனின் போர்க்கப்பலின் தாக்குதலினால் சேதமடைந்தது. உயர் நீதிமன்றக் கட்டிடத்தை அமைப்பதற்கு, அப்போது ஆன செலவு 13 லட்ச ரூபாய் ஆகும். உலகின் இரண்டாவது பெரிய நீதிமன்றமாகவும் (உலகின் முதலாவது பெரிய நீதிமன்றமாக இருப்பது லண்டன், பெய்லி நீதிமன்றம்), இந்தியாவில் முதல் பெரிய உயர் நீதிமன்றமாகவும் சென்னை உயர் நீதிமன்றம் திகழ்கிறது.
தற்போதைய சென்னை உயர் நீதிமன்றக் கட்டிடத்திற்கு முன், கொய்யா தோப்பு (ஜார்ஜ் டவுன்) என்ற இடத்தில் சென்னை உயர் நீதிமன்றம் இயங்கிவந்தது. பிரிட்டிஷ் நீதிபதி ஹாலி ஹார்மன், உயர் நீதிமன்றத்துக்கு தனிக் கட்டிடம் வேண்டும் என்று எழுப்பிய கோரிக்கையை ஏற்று, விக்டோரியா மகாராணி ஒப்புதல் அளித்த பின்பே, தற்போதைய உயர் நீதிமன்றக் கட்டிடம் கட்டப்பட்டது.
சென்னை உயர் நீதிமன்றத்தின், மதுரை அமர்வு இந்தியாவின் தமிழக மாநிலத்தின் மதுரை மாவட்டத்தில் இயங்கும் மாநில உயர்நீதிமன்றக் கிளையாகும்.
துவக்கம்
இந்த கிளை உயர்நீதிமன்றம் ஜூலை 24, 2004 முதல் அப்பொழுதய இந்திய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி திரு ஆர். சி. லகோத்தியால், சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி திரு பி. சுபாஷன் ரெட்டியின் தலைமையில் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளான நீதியரசர்கள் திரு சிவராஜ் வி. பாட்டீல், திரு. கே.ஜி. பாலகிருஷ்ணன், நீதியரசர் முனைவர் திரு ஏ.ஆர். லட்சுமணன், மாண்புமிகு மத்திய சட்டத்துறை அமைச்சர் எச். ஆர். பரத்வாஜ் மற்றும் மாநில சட்டத்துறை அமைச்சர் மாண்புமிகு திரு. டி. ஜெயக்குமார் முன்னிலையில் துவக்கி வைக்கப் பெற்று இயங்கி வருகின்றது.
***************************************************************************
இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
To Attempt the Quiz on APP with Timings & All India Rank,
Download the app now, Click here
Adda247 பயன்பாட்டில் இந்த வினாடி வினாவை முயற்சிக்க இங்கே கிளிக் செய்து அகில இந்திய தரவரிசையைப் பெறுங்கள்
Adda247 TamilNadu Home page | Click here |
Official Website=Adda247 | Click here |
***************************************************************************
*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*
*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*
Adda247App | Adda247 Tamil Youtube
Tamil Engineering Classes by Adda247 Youtube link
Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group
Instagram = Adda247 Tamil
சென்னை உயர்நீதிமன்ற மாதிரி வினாத்தாள்: நீங்கள் சென்னை உயர் நீதிமன்றத் தேர்வுக்குத் தயாரானால், இந்தக் கட்டுரை உங்களுக்கானது. தேர்வாளர், ரீடர்…
சென்னை உயர்நீதிமன்ற பாடத்திட்டம் 2024: சென்னை உயர்நீதிமன்ற பாடத்திட்டம் 2024, சென்னை உயர்நீதிமன்றம் தேர்வாளர், ரீடர் சீனியர் மாநகர், ஜூனியர்…
இந்திய அரசு அமைப்பின் முக்கியமான கேள்விகள் மற்றும் பதில்களைக் கீழே பார்க்கவும். அனைத்து போட்டித் தேர்வுகளிலும் இந்திய அரசு அமைப்பு…
சென்னை உயர் நீதிமன்ற ஆட்சேர்ப்பு 2024: சென்னை உயர் நீதிமன்ற ஆட்சேர்ப்பு 2024 தேர்வாளர், வாசகர் மூத்த மாநகர், ஜூனியர்…
TNPSC குரூப் 1 அறிவிப்பு 2024: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் தேர்வு- I…
இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…