Daily Current Affairs in Tamil- நடப்பு விவகாரங்கள், TNPSC குரூப் 1, TNPSC குரூப் 2/2A, TNPSC குரூப் 4, TNUSRB, TNFUSRC, IBPS, SSC, IB அல்லது BIS தேர்வுகளுக்கான தலைப்புச் செய்திகளாக மாற்றிய முக்கியமான செய்திகளுடன் தினசரி பொது அறிவு (Daily Current Affairs or Today Current Affairs) புதுப்பிப்புகள் இணைக்கப்பட்டுள்ளன. தினசரி பொது அறிவு புதுப்பிப்பு என்பது நாள் முழுவதும் நடைபெற்ற முக்கியமான செய்திகளின் முழுமையான தொகுப்பாகும். எனவே, நடப்பு விவகாரங்கள் (Daily Current Affairs ) பகுதியைத் தயாரிக்க உங்களுக்கு உதவ டிசம்பர் 03 , 2021 யின் பொது அறிவு புதுப்பிப்பு இங்கே.மேலும் வாராந்திர நடப்பு விவகாரங்கள் ( Weekly Current Affairs), மாதாந்திர நடப்பு விவகாரங்கள் (Monthly current Affairs), TNPSC தேர்வுகளுக்கான தமிழில் PDF ஐ வழங்குகிறது இந்த பகுதியைப் படித்த பிறகு, நடப்பு விவகார வினாடி வினாவை (Daily Current Affairs Quiz) வெற்றிகரமாக முயற்சி செய்யலாம்.
Fill the Form and Get All The Latest Job Alerts
2024 ஆம் ஆண்டிற்குள், நாட்டில் ஒன்பது அணு உலைகள் இருக்கும், மேலும் வட இந்தியாவில் முதல் புதிய அணுசக்தி திட்டம், டெல்லியில் இருந்து 150 கிமீ தொலைவில் ஹரியானா மாநிலம் கோரக்பூரில் வரும் என்று அரசு, மாநிலங்களவையில் தெரிவித்துள்ளது. 2024 ஆம் ஆண்டிற்குள், இந்தியாவில் 9000 மெகாவாட் திறன் கொண்ட ஒன்பது அணு உலைகள் மற்றும் 12 புதிய கூடுதல் அணு உலைகள் கோவிட் காலத்தில் அங்கீகரிக்கப்பட்டது.
நாட்டின் அதிகரித்து வரும் மின் தேவைக்கு, மாற்று அல்லது தூய்மையான ஆற்றலின் மிக முக்கியமான ஆதாரங்களில் ஒன்றாக அணுசக்தி விரைவில் உருவாகும் என்று அமைச்சர் கூறினார். 2005 ஆம் ஆண்டிலிருந்து 2030 ஆம் ஆண்டிற்குள், தனது பொருளாதாரத்தின் உமிழ்வு தீவிரத்தை, மூன்றில் ஒரு பங்காகக் குறைப்பதற்கான தனது பாரிஸ் காலநிலை உறுதிப்பாட்டை நிறைவேற்றுவதற்கு, இந்தியா தனது அணுசக்தி திட்டத்தையே நம்பியுள்ளது.
2. பள்ளிக் கல்வியின் தரத்தை மேம்படுத்த ADB 500 மில்லியன் அமெரிக்க டாலர் கடன் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.
ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB), நாட்டின் பள்ளிக் கல்வியின் தரத்தை மேம்படுத்தவும், மாணவர்களின் கல்வியில் கோவிட்-19 தொற்றுநோயின் தாக்கத்தைத் தணிக்கவும் உதவும் வகையில், இந்திய அரசாங்கத்திற்கு $500 மில்லியன் கடனை வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. பள்ளிக் கல்விக்கான ஒருங்கிணைந்த திட்டம் (சமக்ர சிக்ஷா) மற்றும் கல்வி அமைச்சகத்தின் (MOE), புதிய மாதிரி பள்ளி திட்டம், கல்வித் தரத்தை மேம்படுத்துவது ஆகியவற்றை உள்ளடக்கிய நோக்கங்களுக்காக இந்தக் கடன் வழங்கப்பட்டுள்ளது.
அசாம், குஜராத், ஜார்கண்ட், தமிழ்நாடு மற்றும் உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் சுமார் 1,800 அரசுப் பள்ளிகள் முன்மாதிரி பள்ளிகளாக மாற்றப்படும். முன்மாதிரியான பள்ளிகள் தரமான கற்றல் சூழலையும் பயனுள்ள கற்றலையும் நிரூபிக்கும் வகையில் செயல்பட்டு நாடு முழுவதும் உள்ள மற்ற அரசு பள்ளிகளுக்கு ஒரு முன்மாதிரியாக மாறும்.
அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் முக்கியமான குறிப்புகள்:
கல்வி அமைச்சர்: தர்மேந்திர பிரதான்.
3. SBI, INX இந்தியா மற்றும் LuxSE யில் 650 மில்லியன் அமெரிக்க டாலர் பசுமைப் பத்திரங்களை பட்டியலிட்டுள்ளது.
பாரத ஸ்டேட் வங்கி (SBI), அதன் 650 மில்லியன் அமெரிக்க டாலர் பசுமைப் பத்திரங்களை, ஒரே நேரத்தில் இந்தியா இன்டர்நேஷனல் எக்ஸ்சேஞ்ச் (இந்தியா INX) மற்றும் லக்சம்பர்க் பங்குச் சந்தையில் (LuxSE) பட்டியலிட்டது. இந்த இரட்டைப் பட்டியலிடல், 2021 இன் உலக முதலீட்டாளர் வாரத்தின் (WIW), தலைப்பான ‘நிலையான நிதி’ என்பதற்கு ஏற்ப உள்ளது, இது ஒழுங்குமுறை அமைப்பான சர்வதேச நிதிச் சேவை மையங்கள் ஆணையத்தால் (IFSCA) குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியா INX இப்போது $33 பில்லியனுக்கும் மேலாக பத்திரப் பட்டியலின் முன்னணி இடமாக உருவெடுத்துள்ளது.
அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் முக்கியமான குறிப்புகள்:
4. ஃபெடரல் வங்கி பெண்களுக்கான பிரத்யேக அம்சம் நிறைந்த திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது.
தனியார் துறை கடன் வழங்கும் நிறுவனமான பெடரல் வங்கி, பெண்களுக்கான அம்சம் நிறைந்த சேமிப்பு வங்கி தயாரிப்பு ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சேமிப்புத் திட்டம் மஹிலா மித்ரா பிளஸ் என்று அழைக்கப்படுகிறது, மேலும் இது பெண்களுக்கு நிதி திட்டமிடல் மற்றும் முதலீடுகளை எளிதாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட பல்வேறு அம்சங்களை வழங்குகிறது. சிறப்பு அம்சங்களில் வீட்டுக் கடன்களுக்கான பிரத்தியேக முன்னுரிமை வட்டி விகிதங்கள், வீட்டுக் கடன்களுக்கான செயலாக்கக் கட்டணத் தள்ளுபடி, இலவசமான மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட காப்பீடு ஆகியவை அடங்கும்.
அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் முக்கியமான குறிப்புகள்:
5. OECD இந்தியாவின் FY22 க்கான வளர்ச்சியை 9.4% ஆக கணித்துள்ளது.
பாரிஸை சார்ந்த பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான அமைப்பு (OECD), FY22 க்கான இந்தியாவின் வளர்ச்சி கணிப்பை, செப்டம்பர் 2021 இல் மதிப்பிடப்பட்ட 9.7% லிருந்து, 9.4% ஆகக் குறைத்துள்ளது. FY23 இல் இந்தியப் பொருளாதாரம் 8.1% அளவில் உயர்ந்து, FY24 இல் 5% மிதநிலையில் இருக்கும் என்று கணித்துள்ளது. OECD 2021 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய வளர்ச்சி முன்னறிவிப்பை 5.7% இலிருந்து 5.6% ஆகக் குறைத்தது.
OECD இன் கூற்றுப்படி, இந்தியாவில் தொற்றுநோய்களின் இரண்டு அலைகளிலும் வேலைவாய்ப்பு பாதிப்புகளை எதிர்கொண்ட குறைந்த திறமைவாய்ந்த உள்நாட்டு புலம்பெயர்ந்தோர் மற்றும் நகர்ப்புற தொழிலாளர்கள், அவர்களின் வருமானம், தொற்றுநோய்க்கு முந்தைய நிலைக்குத் திரும்புவதை இன்னும் பார்க்கவில்லை.
அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் முக்கியமான குறிப்புகள்:
Download now: Monthly Current Affairs PDF in Tamil October 2021
6. தேசிய சொத்து மறுசீரமைப்பு நிறுவனத்தின் தலைவராக பிரதீப் ஷா நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்ட்ஆசியா ஃபன்ட் அட்வைசர்ஸ் இன் நிறுவனர் பிரதீப் ஷா, தேசிய சொத்து மறுசீரமைப்பு நிறுவனத்தின் (NARCL) தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஹார்வர்டை சேர்ந்த MBA மற்றும் பட்டயக் கணக்காளரான ஷா, இந்தியாவின் முதல் மற்றும் மிகப்பெரிய வீட்டு வசதி நிதி நிறுவனமான HDFC மற்றும் கிரிசில் மதிப்பீட்டு நிறுவனத்தை நிறுவிய பெருமைக்குரியவர்.
மேலும், ஆதித்ய பிர்லா சொத்து மறுசீரமைப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சஞ்சய் ஜெயின், இந்திய டெப்ட் ரெசல்யூஷன் கம்பெனியின் (IDRC) தலைமை நிர்வாகியாக இருப்பார், தனியாருக்குச் சொந்தமான இந்த சொத்து மேலாண்மை நிறுவனம் (AMC), NARCL வாங்கிய வட்டி அளிக்காத கடன்களைத் தீர்க்க கட்டாயப்படுத்தியுள்ளது.
Download Now: Weekly Current Affairs in Tamil 2nd Week of November 2021
7. உலக கூட்டுறவு கண்காணிப்பு அறிக்கை 2021: IFFCO முதலிடத்தில் உள்ளது.
இந்திய உழவர் உர கூட்டுறவு லிமிடெட் (IFFCO) ஆனது, உலகின் முதல் 300 கூட்டுறவு நிறுவனங்களின் தரவரிசையில், முதலாம் இடத்தில் உள்ளது. இந்த தரவரிசை, விற்றுமுதல் மற்றும் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (GDP) விகிதத்தை அடிப்படையாகக் கொண்டது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு IFFCO குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகிறது என்பதை இது குறிக்கிறது. 10வது ஆண்டு உலக கூட்டுறவு கண்காணிப்பு (WCM) அறிக்கையின் 2021 பதிப்பு, 2020 பதிப்பிலிருந்த அதன் நிலையை தக்க வைத்துக்கொண்டுள்ளது.
அறிக்கை பற்றி:
2021 WCM அறிக்கை சர்வதேச கூட்டுறவு கூட்டணி (ICA) மற்றும் கூட்டுறவு மற்றும் சமூக நிறுவனங்களுக்கான ஐரோப்பிய ஆராய்ச்சி நிறுவனம் (Euricse) ஆகியவற்றால் வெளியிடப்பட்டது. WCM என்பது உலகளாவிய கூட்டுறவுகளைப் பற்றிய வலுவான பொருளாதார, நிறுவன மற்றும் சமூகத் தரவைச் சேகரிக்க வடிவமைக்கப்பட்ட ஒரு திட்டமாகும்.
இந்த அறிக்கை 10 வது ஆண்டுக்கானது.
அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் முக்கியமான குறிப்புகள்:
Check Now : Weekly Current Affairs in Tamil 3rd Week of November 2021
8. ரத்தன் டாடாவுக்கு அசாமின் உயரிய குடிமகன் விருது.
அசாம் திவஸை முன்னிட்டு, அசாம் மாநில அரசு, பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடாவுக்கு, மாநிலத்தில் புற்றுநோய் சிகிச்சையில் அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக, மாநிலத்தின் மிக உயரிய விருதான ‘அசோம் பைபவ்’ விருதை வழங்க முடிவு செய்துள்ளது. அதற்கு முந்தைய விருது அசோம் சவுரவ், அதைத் தொடர்ந்து அசோம் கௌரவ் ஆகும். அசாம் அரசாங்கம் சுகாதாரத்தை அதன் முதன்மையான முன்னுரிமைகளில் ஒன்றாகக் கொண்டு, அந்த பிராந்தியத்தில் புற்றுநோய் சிகிச்சைக்கான டாடாவின் உந்துதலைப் பாராட்டி இந்த விருதை வழங்குகிறது.
டாடா அறக்கட்டளை, அசாம் அரசாங்கத்துடன் இணைந்து, 2018 இல் நடந்த ‘அட்வாண்டேஜ் அசாம் – உலகளாவிய முதலீட்டாளர்கள் உச்சிமாநாட்டின்’ போது, 19 புற்றுநோய் சிகிச்சை பிரிவுகளை அமைக்க முடிவு செய்திருந்தது மற்றும் அசாம் அரசாங்கத்திற்கும், டாடா அறக்கட்டளைக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. மருத்துவமனைகள் மூன்று அடுக்கு அமைப்பில் அமைக்கப்பட வேண்டும் மற்றும் L1, L2 மற்றும் L3 ஆகிய பிரிவுகளின் கீழ் கட்டப்பட வேண்டும், இது அவர்களால் வழங்கப்படும் பராமரிப்பு தரத்தை குறிக்கிறது. ரத்தன் டாடா மாநிலத்தில் புற்றுநோய் சிகிச்சை பிரிவுகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் முக்கியமான குறிப்புகள்:
9. இந்திய கடற்படை தினம்: சாதனைகளை கொண்டாடுவது – டிசம்பர் 04
இந்தியாவில், ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 4 ஆம் தேதி, தேசிய கடற்படை தினமாக அனுசரிக்கப்படுகிறது, இது கடற்படையின் சாதனைகள் மற்றும் பங்கைக் கொண்டாடுகிறது. 2021 ஆம் ஆண்டுக்கான இந்திய கடற்படை தினத்தின் கருப்பொருள் ‘ஸ்வர்னிம் விஜய் வர்ஷ்’ என்பதாகும், இது 1971 இல் நடந்த இந்தியா-பாகிஸ்தான் போரில் இந்தியா வெற்றி பெற்றதன் 50 ஆண்டுகளைக் குறிக்கிறது.
இந்திய கடற்படை தின வரலாறு:
இந்தியக் கடற்படை என்பது இந்தியக் குடியரசுத் தலைவர் (படைத் தளபதி) தலைமையிலான இந்திய ஆயுதப் படைகளின் கடற்படைக் கிளை ஆகும். மீண்டும் 1971 இல், இந்தியா-பாகிஸ்தான் போரின் போது, பாகிஸ்தானுக்கு எதிராக, ஆபரேஷன் ட்ரைடென்ட்டை தொடங்க, டிசம்பர் 4 தேர்வு செய்யப்பட்டது. பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றி, நம் நாட்டை பெருமைப்படுத்தியது மட்டுமல்லாமல், இந்திய கடற்படையை மேலும் மதிக்கத்தக்கதாக்கியது.
இந்திய கடற்படை பற்றிய சில உண்மைகள்:
அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் முக்கியமான குறிப்புகள்:
10. சர்வதேச வங்கிகள் தினம்: டிசம்பர் 04
நிலையான வளர்ச்சிகளுக்கு நிதியளிப்பதில் பலதரப்பு மற்றும் சர்வதேச மேம்பாட்டு வங்கிகளின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்க, டிசம்பர் 4 ஆம் தேதி சர்வதேச வங்கிகள் தினம் கொண்டாடப்படுகிறது. உறுப்பு நாடுகளில், வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில் வங்கி அமைப்புகளின் முக்கிய பங்கை அங்கீகரிக்கும் வகையில், ஐக்கிய நாடுகள் சபையும் இந்த நாளைக் கடைப்பிடிக்கிறது.
இந்த தினத்திற்கான வரலாறு:
2019 ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை டிசம்பர் 4 ஆம் தேதியை வங்கிகளின் சர்வதேச தினமாக குறித்தது. இது 2020 ஆம் ஆண்டில் முதன் முறையாகக் கொண்டாடப்பட்டது. நீடித்த வளர்ச்சிக்கு நிதியளிப்பதிலும், அறிவை வழங்குவதிலும், பலதரப்பு மேபாட்டு வங்கிகள் மற்றும் பிற சர்வதேச மேபாட்டு வங்கிகளின் குறிப்பிடத்தக்க ஆற்றலை அங்கீகரிப்பதற்காகவும், மேலும் உறுப்பு நாடுகளில், வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில் வங்கி அமைப்புகளின் முக்கிய பங்கை அங்கீகரிப்பதற்காகவும் கொண்டாடப்படுகிறது.
11. கோரக்பூரில் தூர்தர்ஷன் கேந்திராவின் செயற்கைக்கோள் தகவல் மையம் திறக்கப்பட்டது.
மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் மற்றும் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர், கோரக்பூரில் தூர்தர்ஷன் கேந்திராவின் புவி நிலையத்தைத் திறந்து வைத்தனர். அகில இந்திய வானொலியின் மூன்று FM நிலையங்களும், இந்த நிகழ்வில் திறக்கப்பட்டன. உத்தரபிரதேசத்தில், இது தூர்தர்ஷனின் இரண்டாவது புவி நிலையமாகும், இது ரூ.7 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது.
புவி நிலையம் பற்றி:
இந்த புவி நிலையம், உள்ளூர் அளவில் உருவாக்கப்படும் நிகழ்ச்சிகளை உலகம் முழுவதும் DTH மூலம் நேரடியாக ஒளிபரப்பும். தூர்தர்ஷன் கேந்திரா கோரக்பூரில் உள்ள புவி நிலையம், உள்ளூர் போஜ்புரி கலைஞர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும்.
அகில இந்திய வானொலியின் மூன்று FM நிலையங்கள் எட்டாவா, லக்கிம்பூர் கெரி மற்றும் பஹ்ரைச் மாவட்டங்களில் இன்று திறக்கப்பட்டன. இந்த FM நிலையங்களைச் சேர்ப்பது, அகில இந்திய வானொலியின் வரவை குறிப்பாக, இந்திய-நேபாள எல்லைப் பகுதிகளில் மேலும் மேம்படுத்தும்.
*****************************************************
*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*
*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*
Adda247App | Adda247 Tamil Youtube
Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group
இந்திய அரசு அமைப்பின் முக்கியமான கேள்விகள் மற்றும் பதில்களைக் கீழே பார்க்கவும். அனைத்து போட்டித் தேர்வுகளிலும் இந்திய அரசு அமைப்பு…
சென்னை உயர் நீதிமன்ற ஆட்சேர்ப்பு 2024: சென்னை உயர் நீதிமன்ற ஆட்சேர்ப்பு தேர்வாளர், வாசகர் மூத்த மாநகர், ஜூனியர் மாநகர்…
TNPSC குரூப் 1 அறிவிப்பு 2024: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் தேர்வு- I…
இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…
பல்வேறு போட்டித் தேர்வுகளில் இயற்பியல் முக்கியப் பங்காற்றுகிறது, விண்ணப்பதாரர்களுக்கு அவர்களின் தயாரிப்பில் உதவ, நாங்கள் 30 கேள்விகளை (MCQs) தொகுத்துள்ளோம்.…
இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…