COVID-19 நோய் தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பரவல் அதிகரித்து நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதன் காரணமாக மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் தேவை அதிகரித்துள்ளது. அதனை ஈடுகட்டும் விதமாய் அரசின் வழிகாட்டுதலின் படி தற்காலிகமாக திருப்பூர் மாவட்டத்தில் தொகுப்பூதியத்தில் பணியாற்ற ஆள்சேர்ப்பு நடைபெறுகிறது.
வ.எண் | பணியாளர்கள் விபரம் | எண்ணிக்கை |
1 | மருத்துவர்கள் | 62 |
2 | செவிலியர்கள் | 148 |
3 | ஆய்வக நுட்புநர்கள் (Lab Techncion) | 11 |
4 | புள்ளி விபர பதிவாளர்கள் (Data EntryOperators) | 8 |
5 | மருத்துவமனை பணியாளர்கள் (Hospital Workers) | 74 |
ஆகியோர் பணி நியனம் செய்யப்படவுள்ளனர்.
எனவே எம்.பி.பி.எம் (MBBM) முடித்த மருத்துவர்கள், எம்.பி.பி.எஸ் (MBBS) முடித்து முதுநிலை படிப்புக்காக காத்திருப்போர், ஓய்வு பெற்ற மருத்துவர்கள், தகுதி பெற்ற செவிலியர்கள், பட்டயப்படிப்பு முடித்த ஆய்வக நுட்புநர்கள் (Lab Techncions), புள்ளி விபர பதிவாளர்கள் (Data Entry Operators) மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் (Hospital Workers) ஒப்பந்த அடிப்படையில் கொரோனா தொற்று நோயாளிகளுக்கு உதவிக்கரம் நீட்டி சேவை செய்ய விரும்புவோர்
துணை இயக்குநர் (பொது சுகாதார பணிகள்) அலுவலகம்,
147, பூலுவப்பட்டி பிரிவு,
நெருப்பெரிச்சல் ரோடு,
திருப்பூர்
என்ற முகவரிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் 0421-2971199 மற்றும் 0421-2478500
Coupon code- EID72– 72% OFFER
**TAMILNADU state exam online coaching and test series
https://tamil-website-ta.site.strattic.iomil_nadu-study-materials
**WHOLE TAMILNADU LIVE CLASS LINK
https://tamil-website-ta.site.strattic.iomil_nadu/live-classes-study-kit