வேதகாலம் பற்றி அறிந்துகொள்ள பகுதி – 1,பகுதி – 2 மற்றும் பகுதி – 3 ண்டை இங்கு படியுங்கள்.
பெண்களின் நிலை
ரிக்வேதகால:
- ரிக்வேதகால சமூகத்தில், பெண்கள் ஓரளவிற்கு சுதந்திரம் பெற்றிருந்தனர்.
- மனைவி குடும்பத்தின் தலைவியாக மதிக்கப்பட்டார்.
- பெண்கள் தனது கணவருடன் தமது வீட்டில் சடங்குகள் நடத்தினார்.
- குழந்தைத் திருமணத்தையும், உடன்கட்டை ஏறுதலையும் அறிந்திருக்கவில்லை.
- கைம்பெண்கள் மறுமணம் செய்து கொள்ளத் தடைகள் இல்லை.
- பெற்றோரிடமிருந்து சொத்துக்களைப் பெறும் சொத்துரிமை பெண்களுக்கு மறுக்கப்பட்டது.
- பொது நிகழ்வுகளில் பெண்கள் எந்தப் பங்கும் வகிக்கவில்லை.
பின்வேதகாலம்:
- பின்வேதகாலத்தில் சமூகத்தில் மட்டுமின்றி, குடும்பத்திலும் கூட பெண்களின் பங்கும் அவர்களுக்கான நிலையும் குறைந்துபோனது.
- பெண்கள் குடும்பத்தில் சடங்குகளை நடத்த முடியாத நிலை உருவானது.
- திருமணம் தொடர்பான விதிகள் இறுக்கமும் குழப்பமும் பெற்றன.
- பலதார மணம் சாதாரணமாக நடைபெற்றது.
- கைம்பெண் மறுமணத்திற்கு ஊக்கம் அளிக்கப்படவில்லை.
- பெண்களுக்குக் கல்வி மறுக்கப்பட்டது.
- கலப்புத் திருமணம் நிராகரிக்கப்பட்டது.
பொருளாதார வாழ்க்கை
ரிக்வேதகால:
- வேதகாலப் பொருளாதாரமானது கால்நடை மேய்ச்சலும் வேளாண்மையும் கலந்ததாகும்.
- ரிக்வேதகால ஆரியர்களின் முதன்மைத் தொழில் கால்நடைகள் மேய்ப்பது.
- பழுப்பு மஞ்சள் நிற மட்பாண்டங்கள் இக்காலத்தைச் சேர்ந்ததாகும்.
- சிந்து மற்றும் பஞ்சாப் பகுதிகளில் ஆரியர்கள் நிரந்தரமாகக் குடியேறியபின் அவர்கள் வேளாண்மை செய்யத் தொடங்கினார்.
- யவா (பார்லி) அவர்களின் முதன்மை பயிராகும்.
- கோதுமை, பருத்தி ஆகியவை சிந்துவெளி மக்களால் பயிர் செய்யப்பட்ட போதிலும் ரிக் வேதத்தில் அவைகள் பற்றி குறிப்பிடப்படவில்லை.
- ஒவ்வொரு வருடமும் இருபோகம் சாகுபடி செய்யப்பட்டது.
பின்வேதகாலம்:
- பின்வேத காலத்தில் ஆரியர்கள் பசு, வெள்ளாடு, செம்மறியாடு, குதிரை மட்டுமல்லாமல் யானைகளையும் பழக்கப்படுத்தினர்.
- தொடக்க வேத கால கைவினைஞர்களோடு நகை செய்வோர், சாயத்தொழில் செய்வோர், உலோகங்களை உருக்குவோர் போன்றோரும் சமூகத்தில் இடம் பெற்றிருந்தனர்.
- இக்காலப் பண்பாடு வர்ணம் தீட்டப்பட்ட சாம்பல் நிற மட்பாண்டப் பண்பாடு என்று அழைக்கப்படுகிறது.
- இரும்புக் கொழுமுனை கொண்ட கலப்பை மற்றும் இரும்புக் கோடாரி ஆகியவற்றின் உதவியோடு அதிக அளவிலான நிலங்களில் வேளாண்மை செய்யப்பட்டது.
- நெல், கோதுமை, பார்லி ஆகியன செய்யப்பட்டன.
- பயிர் வேளாண்மை வளர்ச்சி பெற்றதால் நிலத்தின் மீது தனியுரிமை உருவானது.
- புதிய தொழில்களும், கலைகளும் வளர்ந்து உபரி உற்பத்தி ஏற்பட்டு வணிகத்துக்கு இட்டுச் சென்றன.
- பண்டமாற்றுமுறை பரவலாகக் காணப்பட்டது. (ஒரு பொருளைக் கொடுத்து வேறொரு பொருளை வாங்குவது).
- அவர்கள் நிஷ்கா, சத்மனா என்னும் தங்க நாணயங்களையும், கிருஷ்ணாலா என்னும் வெள்ளி நாணயங்களையும் வணிகத்தில் பயன்படுத்தினர்.
இது பகுதி 4 மற்றும் அடுத்த பகுதிக்கு adda247 செயலியை பதிவிறக்கம் செய்யவும். TNPSC, TNUSRB, TRB மற்றும் பிற போட்டித் தேர்வுகளுக்கான தேர்வில் தேர்ச்சி பெற இது உதவும்.
***************************************************************************
Adda247 TamilNadu Home page | Click here |
Official Website=Adda247 | Click here |
Adda247App | Adda247 Tamil Youtube
Adda247 Tamil telegram group –TNPSC sure shot selection group
Instagram = Adda247 Tamil