Tamil govt jobs   »   Study Materials   »   இந்திய தேசிய கொடுப்பனவு நிறுவனம் | National...

இந்திய தேசிய கொடுப்பனவு நிறுவனம் | National Payments Corporation of India (NPCI) for TNPSC

Table of Contents

இந்திய தேசிய கொடுப்பனவு நிறுவனம் இந்தியாவின் அனைத்து சில்லறைக் கொடுப்பனவு அமைப்புக்களுக்கும் மைய நிறுவனமாக விளங்குகின்றது. இந்திய தேசிய கொடுப்பனவு நிறுவனத்துடைய இலக்கு, நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் எவ்விடத்திலிருந்தும் எந்நேரத்திலும் இணையக் கொடுப்பனவுகளை செய்ய இயலுமாறு செய்வதாகும். இந்திய தேசிய கொடுப்பனவு நிறுவனம், அதன் நோக்கங்கள், நிறுவனத்தின் ஒழுங்குமுறை உறுப்பினர்கள் மற்றும் அதன் தயாரிப்புகள் தொடர்பான தகவல்களை, இந்த கட்டுரையில் நாம் விரிவாக பார்க்கவுள்ளோம்.

Fill the Form and Get All The Latest Job Alerts

இந்திய தேசிய கொடுப்பனவு நிறுவனம் ஒரு கண்ணோட்டம்

இந்திய தேசிய கொடுப்பனவு நிறுவனம் (NPCI) என்பது, இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மற்றும் இந்திய வங்கிகள் சங்கம் (IBA) ஆகியவை, இந்தியாவில் சில்லறை கொடுப்பு மற்றும் தீர்வு-ஒப்பந்த முறைகளை இயக்குவதற்கான ஒரு முயற்சியாகும். இந்த அமைப்பு 2008 ஆம் ஆண்டு கொடுப்பு மற்றும் தீர்வு-ஒப்பந்த முறைகள் சட்டம், 2007 இன் கீழ் நிறுவப்பட்டது. நிறுவனங்கள் சட்டம், 2013 இன் பிரிவு 8 இன் கீழ், NPCI ஆனது லாப நோக்கமற்ற நிறுவனமாக இணைக்கப்பட்டுள்ளது.

இது உள்நாட்டு அட்டைக் கொடுப்பனவு பிணையம் ரூபே உருவாக்கத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இதனால் பன்னாட்டு அட்டை திட்டங்களின் மீதான சார்பு குறைந்துள்ளது. தற்போது ரூபே அட்டை நாட்டின் அனைத்து தன்னியக்க வங்கி இயந்திரங்களிலும், விற்பனை முனை கணினிகளிலும், பெரும்பாலான இணைய வணிக நிறுவனங்களிலும் ஏற்கப்படுகின்றது.

NPCI இன் விரிவாக்கம் National Payments Corporation of India
நிறுவப்பட்ட ஆண்டு 2008
தலைமையகம் மும்பை (மகாராஷ்டிரா)

Also Read: Education System in Tamil Nadu | தமிழ்நாட்டில் கல்வி முறை – Part 1

இந்திய தேசிய கொடுப்பனவு நிறுவனம் என்றால் என்ன?

National Payments Corporation of India
National Payments Corporation of India

இந்திய தேசிய கொடுப்பனவு நிறுவனம் (NPCI) இந்தியாவில் சில்லறை கட்டணத்தை செயல்படுத்துவதற்கான ஒரு அமைப்பாக விளங்குகிறது. இந்த அமைப்பு, இந்திய ரிசர்வ் வங்கியால், இந்திய வங்கிகள் சங்கத்துடன் இணைந்து நிறுவப்பட்டது. NPCI டிசம்பர் 2008 இல் பதிவுசெய்யப்பட்டு, இந்திய ரிசர்வ் வங்கியால் ஊக்குவிக்கப்பட்டது. வணிகத்தை தொடங்குவதற்கான சான்றிதழ் ஏப்ரல் 2009 இல் வழங்கப்பட்டது.

தற்போது, NPCI பத்து முக்கிய ஊக்குநர் வங்கிகளால் ஊக்குவிக்கப்படுகிறது:

  • பாரத ஸ்டேட் வங்கி
  • பஞ்சாப் நேஷனல் வங்கி
  • கனரா வங்கி
  • பேங்க் ஆஃப் பரோடா
  • யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா
  • பேங்க் ஆஃப் இந்தியா
  • ICICI வங்கி
  • HDFC வங்கி
  • சிட்டி வங்கி
  • HSBC

இந்திய தேசிய கொடுப்பனவு நிறுவனம் ஒரு சேவை வழங்கும் நிறுவனம் ஆகும். அதன் பல கட்டண முறைகளில், பரிமாற்றக் கட்டணம் மற்றும் பிற கட்டணங்கள் மூலம் அதன் வருவாயில் மூன்றில் ஒரு பங்கைப் பெறுகிறது.

Also Read: Education System in Tamil Nadu | தமிழ்நாட்டில் கல்வி முறை – Part 2

இந்திய தேசிய கொடுப்பனவு நிறுவன ஒழுங்குமுறை வாரியத்தின் உறுப்பினர்கள்

மும்பையைத் தலைமையிடமாகக் கொண்ட இந்திய தேசிய கொடுப்பனவு நிறுவனம், நிறுவனங்கள் சட்டம் 2013 இன், பிரிவு 8 இன் கீழ், பதிவுசெய்யப்பட்ட ஒரு அமைப்பாகும்.

NPCI இன் ஒழுங்குமுறை வாரியம், பின்வரும் உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.

  • பிஸ்வமோகன் மஹாபத்ரா NPCI இன் நிர்வாகமற்ற தலைவராவார்.
  • இந்திய ரிசர்வ் வங்கியிலிருந்து(RBI) பரிந்துரைக்கப்பட்டவர்கள்.
  • பத்து முக்கிய ஊக்குநர் வங்கிகளில் இருந்து பரிந்துரைக்கப்பட்டவர்கள்.

தற்போது, திலிப் அஸ்பே NPCI இன் தற்போதைய நிர்வாக இயக்குநராகவும், தலைமை நிர்வாக அதிகாரியாகவும் உள்ளார்.

Also Read: ஆரம்ப பொது விடுப்புகள் | Initial Public Offering​ (IPO) for TNPSC

இந்திய தேசிய கொடுப்பனவு நிறுவனத்தின் நோக்கங்கள்

Objectives of NPCI
Objectives of NPCI

இந்திய தேசிய கொடுப்பனவு நிறுவனம்(NPCI), இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மற்றும் இந்திய வங்கிகள் சங்கம் (IBA) ஆகியவற்றின் ஆதரவின் கீழ், பல்வேறு முறைகளை, நாடு தழுவிய, சில்லறை கட்டண முறையாக பயன்படுத்தப்படும், ஒரு சீரான மற்றும் நிலையான வணிக செயல்முறையாக ஒன்று சேர்த்து, ஒருங்கிணைக்கும் நோக்கத்துடன் இருந்தது. NPCI இன் மற்றொரு முக்கிய நோக்கம், நிதிச் சேர்க்கையின் போது, எளிய மக்களுக்கு உதவும் வகையில், மலிவு கட்டண முறையை எளிதாக்குவதாகும்.

PSS சட்டம், 2007 இன் கீழ், RBI இன் அங்கீகாரத்தின்படி, NPCI ஆல் பின்வரும் கட்டண முறைகளை இயக்க முடியும்:

  1. தேசிய நிதி மாறுதல்  National Financial Switch (NFS)
  2. உடனடி கட்டண முறை  Immediate Payment System (IMPS)
  3. வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் (NBFC கள்) அல்லது RBI ஆல் அங்கீகரிக்கப்பட்ட பிற நிறுவனங்களால் வழங்கப்பட்ட ரூபே கார்டுகள் (டெபிட் கார்டுகள் / ப்ரீபெய்ட் கார்டுகள்) மற்றும் இணை முத்திரை கிரெடிட் கார்டுகளின் இணைப்பு.
  4. தேசிய தானியங்கி காசோலைத் தீர்வகம்   National Automatic Clearing House (ACH)
  5. ஆதார் செயல்படுத்தப்பட்ட கட்டண முறை  Aadhaar Enabled Payments System (AEPS)
  6. காசோலை துண்டிப்பு அமைப்பின் (Cheque Truncation System – CTS) செயல்பாடு.

Download Now : Weekly Current Affairs in Tamil 3rd Week of November 2021 

இந்திய தேசிய கொடுப்பனவு நிறுவனத்தின் கிளை ஆட்சி நிறுவனங்கள்

NPCI இன்டர்நேஷனல் பேமெண்ட்ஸ் லிமிடெட் (NIPL)

NPCI International Payments Ltd
NPCI International Payments Ltd

NPCI தனது தயாரிப்புகளை உலகளாவிய சந்தைக்கு கொண்டு செல்ல தனி துணை நிறுவனத்தை உருவாக்கியுள்ளது. இந்த அமைப்பு ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளைச் சுற்றியுள்ள நாடுகளின் கட்டணக் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான அழைப்பை பெற்றுள்ளது. RuPay மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட கட்டண இடைமுகம் (UPI) இன் சர்வதேசமயமாக்கல், NPCI இன்டர்நேஷனல் பேமெண்ட்ஸ் லிமிடெட்டின் (NIPL) முதன்மையான நோக்கமாகும்.

2021 இல், மலேசிய நிறுவனமான Merchantrade Asia, UPI உள்கட்டமைப்பு மூலம் இந்தியாவிற்கு பணம் அனுப்புவதற்காக NIPL உடன் இணைந்துள்ளது.

NPCI பாரத் பில்பே லிமிடெட் (NBBL)

ஏப்ரல் 2021 முதல், NPCI பாரத் பில் பேமென்ட் சிஸ்டத்திற்கு (BBPS) ஒரு புதிய துணை நிறுவனத்தை உருவாக்கியது, இது குறிப்பாக சிறு வணிகங்களுக்கான நுகர்வோர் பிரிவு வணிகத்திற்கான வளர்ச்சியை அதிகரிக்கும். UPI, IMPS, ஆதார் இயக்கப்பட்ட கட்டண முறை மற்றும் தேசிய மின்னணு டோல் கலெக்ஷன்கள் ஆகியவற்றிலிருந்து அதிகரித்து வரும் வரத்து மற்றும் பணிச்சுமையைக் கருத்தில் கொண்டு, இது உருவாக்கப்பட்டது. NBBL என்பது டிசம்பர் 2020 இல் பதிவுசெய்யப்பட்ட ஒரு பொது நிறுவனம் ஆகும்.

Also Read: E-governance Part II | மின் ஆளுகை பகுதி II

இந்திய தேசிய கொடுப்பனவு நிறுவனத்தின் தயாரிப்புகள்

இந்தியாவின் தேசிய கொடுப்பனவு நிறுவனத்தின் கீழ் தொடங்கப்பட்ட, சில தற்போதைய தயாரிப்புகள் பற்றி கீழே விவாதிக்கப்பட்டுள்ளன:

ரூபே

Rupay
Rupay

இது இந்தியாவின் உள்நாட்டு அட்டைத் திட்டமாகும், இது EMV சிப்புடன் காந்தப் பட்டையையும் கொண்டுள்ளது. இந்த அட்டை இப்போது அனைத்து ATM களிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு, இந்தியாவில் உள்ள 300 கூட்டுறவு வங்கிகள் மற்றும் பிராந்திய கிராமப்புற வங்கிகளால் (RRBs) வழங்கப்படுகிறது.

நேஷனல் காமன் மொபிலிட்டி கார்டு (NCMC)

National Common Mobility Card
National Common Mobility Card

ரூபே காண்டாக்ட்லெஸ் கார்டு என்றும் அழைக்கப்படும் இது, தொடர்பு இல்லாத கொடுப்பனவு தொழில்நுட்பம் ஆகும். இந்த கார்டு வைத்திருப்பவர்கள், கார்டை ஸ்வைப் செய்யவோ அல்லது கார்டை இயந்திரத்திற்குள் செருகவோ தேவையில்லாமல், தொடர்பு இல்லாத கொடுப்பனவு கடைகளில் பயன்படுத்த அனுமதிக்கிறது.

பாரத் இன்டெர்ஃபேஸ் ஃபார் மணி (BHIM)

Bharat Interface for Money
Bharat Interface for Money

பாரத் இன்டெர்ஃபேஸ் ஃபார் மணி (BHIM) என்பது NPCI இன் யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (UPI) அடிப்படையிலான மொபைல் கட்டணப் பயன்பாடாகும். UPI ஐப் பயன்படுத்தி மற்ற வாடிக்கையாளர்களிடமிருந்து எளிதாக பணம் பெறுவதற்கான அல்லது அனுப்புவதற்கான வசதியை இது வழங்குகிறது.

Also Read: Social Welfare Schemes of Government of Tamil Nadu PART 1 | தமிழக அரசின் சமூக நலத் திட்டங்கள் பகுதி 1

யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (UPI)

Unified Payments Interface
Unified Payments Interface

யூனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (UPI), 11 ஏப்ரல் 2016 அன்று வங்கிகளுக்கு இடையேயான உடனடி கட்டண முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது. இரண்டு வங்கிக் கணக்குகளுக்கு இடையே உடனடி பணப் பரிமாற்றத்திற்கான மொபைல் தளத்தை வழங்க, இந்த கட்டண முறை உருவாக்கப்பட்டது.

பாரத் பில் பேமென்ட் சிஸ்டம் (BBPS)

Bharat Bill Payment System
Bharat Bill Payment System

பாரத் பில் பேமென்ட் சிஸ்டம் என்பது இந்திய ரிசர்வ் வங்கியுடன் (RBI) இணைந்து அனைத்து ரசீதுகளையும் செலுத்துவதற்காக இந்திய தேசிய கொடுப்பனவு நிறுவனம் எடுத்த ஒரு முயற்சியாகும், இது அதன் வாடிக்கையாளர்களுக்கு, எளிதாக இயங்கக்கூடிய மற்றும் அணுகக்கூடிய ரசீது கட்டண சேவையை வழங்கும்.

இந்திய தேசிய கொடுப்பனவு நிறுவனம் ஆனது, இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் இந்திய வங்கிகள் சங்கத்தின் முன்முயற்சியாகும். அதன் உடனடி பணம் செலுத்தும் சேவை (IMPS), சில்லறை விற்பனைத் துறையில் நிகழ்நேர பணம் செலுத்துவதில், இந்தியாவை உலகின் முன்னணி நாடாக ஆக்கியுள்ளது.

Also Read: Best Study Materials For TNPSC | TNPSCக்கான சிறந்த பாட புத்தகங்கள்

இந்திய தேசிய கொடுப்பனவு நிறுவனத்தின் முடிவுரை

போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.  இக்கட்டுரை TRB, TNPSC GROUP 2 & 2A, GROUP 1, க்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளது.

Coupon code- NOV75-75% OFFER

TNPSC Group - 4 Batch Tamil Live Classes
TNPSC Group – 4 Batch Tamil Live Classes

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group