Tamil govt jobs   »   Latest Post   »   TNPSC Samacheer Book Back Questions Tamil...

TNPSC Samacheer Book Back Questions Tamil Medium- South Indian Kingdoms

TNPSC Samacheer Book Back Questions: ADDA 247 Tamil is giving you TNPSC Samacheer Book Back Questions – South Indian Kingdoms MCQs for all competitive exams. Here you get Multiple Book Back Choice Questions and Answers. Here you will find all the important questions and answers that will help you increase your knowledge and move you toward fulfilling your goals. Study these TNPSC Book Back Questions MCQs and succeed in the exams.

Attend TNPSC Book Back Question Quiz Here

 

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

Q1. கீழ்க்காண்பவர்களில் வைகுண்டப்பெருமாள் கோவிலைக் கட்டியது யார்?

(a) இரண்டாம் நரசிம்மவர்மன் 

(b) இரண்டாம் நந்திவர்மன்

(c) தந்திவர்மன் 

(d) பரமேஸ்வரவர்மன்

S1.Ans.(b)

Sol.

நந்திவர்மன் பாணி

  • பல்லவ கோவில் கட்டக்கலையின் இறுதிக் கட்டம்.
  • பிற்காலப் பல்லவர்களால் கட்டப்பட்ட கட்டுமானக் கோவில்களால் பிரதிநித்துவப் படுத்தப்படுகின்றன.
  • காஞ்சிபுரத்திலுள்ள வைகுண்டப்பெருமாள் கோவில் இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

Q2. கீழ்க்காண்பனவனுற்றுள் முதலாம் மகேந்திரவர்மன் சூட்டிக் கொண்ட பட்டங்கள் யாவை?

(a) மத்தவிலாசன் 

(b) விசித்திரசித்தன்

(c) குணபாரன் 

(d) இவை மூன்றும்

S2.Ans.(d)

Sol.

  • சங்கீரணஜதி,
  • மத்தவிலாசன்,
  • குணபாரன்,
  • சித்திரகாரப் புலி,
  • விசித்திர சித்தன்

 

Q3. கீழ்க்காண்பனவற்றில் இரண்டாம் புலிகேசியின் வெற்றிகளை விவரிக்கும் கல்வெட்டு எது?

(a) அய்கோல் 

(b) சாரநாத்

(c) சாஞ்சி 

(d) ஜுனாகத்

S3.Ans.(a)

Sol.

அய்கோல் கல்வெட்டு: 

  • இக்கல்வெட்டு அய்கோலிலுள்ள (பாகல்கோட் மாவட்டம், கர்நாடகா) மேகுதி கோவிலில் உள்ளது.
  • இது சாளுக்கிய அரசன் இரண்டாம் புலிகேசியின் அவைக்களப் புலவரான ரவிகீர்த்தி என்பவரால் சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்டது.
  • இக்கல்வெட்டு ஹர்ஷவர்த்தனர் இரண்டாம் புலிகேசியால் தோற்கடிக்கப்பட்டதைக் குறிப்பிடுகின்றது.

 

II.கீழ்க்காணும் கூற்றுகளை வாசித்துப் பொருத்தமான விடையை டிக் () செய்யவும்

Q4. கூற்று i: பாறை குடைவரை கோவிலைச் செதுக்கும் முறையிலிருந்து, கற்களைக் கொண்டு கட்டுமானக் கோவில்களைக் கட்டும் மாற்றம் ஏற்பட்டதை பல்லவர் கலை உணர்த்துகிறது.

கூற்று ii: காஞ்சிபுரத்திலுள்ள கைலாசநாதர் கோவில் பல்லவர்களின் கலை மற்றும் கட்டடக் கலைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

(a) கூற்று i தவறு 

(b) கூற்று ii தவறு

(c) இரு கூற்றுகளும் சரி 

(d) இரு கூற்றுகளும் தவறு

S4.Ans.(c)

Sol.

  • ராஜசிம்மன் எனவும் அறியப்பட்ட இரண்டாம் நரசிம்மவர்மன் பெருங்கற்களைக் கொண்டு கட்டுமானக் கோவில்களைக் கட்டினார். 
  • காஞ்சிபுரத்திலுள்ள கைலாசநாதர் கோவில் கட்டுமானக் கோவில் கலைப் பாணிக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும்
  • இக்கோவில்கள் மிருதுவான மணற் கற்களால் கட்டப்பட்டவையாகும். கைலாசநாதர் கோவில் ராஜசிம்மேஸ்வரம் என்று அழைக்கப்படுகிறது.

 

Q5. பல்லவ அரசினைப் பற்றிய கூற்றுகளைச் சிந்திக்கவும்

கூற்று i: இவர்களுடைய ஆட்சியில் அப்பரால் இயற்றப்பட்ட தேவாரம் முதல் மற்ற தமிழ் இலக்கியங்களும் செழித்தோங்கின.

கூற்று ii: முதலாம் மகேந்திரவர்மன் மத்த விலாச பிரகசனம் எனும் நூலின் ஆசிரியர் ஆவார்.

(a) கூற்று i மட்டும் சரி 

(b) கூற்று ii மட்டும் சரி

(c) இரு கூற்றுகளும் சரி 

(d) இரு கூற்றுகளும் தவறு

S5.Ans.(b)

Sol.

  • கட்டடக்கலைக்கு ஒரு புதிய திராவிடக் பாணியை அறிமுகம் செய்தார். 
  • அது ‘மகேந்திரபாணி’ எனக் குறிப்பிடப்படுகின்றது. 
  • மத்தவிலாசப்பிரகசனம் (குடிகாரர்களின் மகிழ்ச்சி) உட்பட நாடகங்களைச் சில சமஸ்கிருத மொழியில் எழுதியுள்ளார். 
  • இந்நாடகம் பௌத்தத்தை இழிவுபடுத்தும் வகையில் உள்ளது.
  • தமிழ் இலக்கியமும் வளர்ச்சி பெற்றிருந்தது. 
  • நாயன்மார்களால் இயற்றப்பட்ட தேவாரமும் ஆழ்வார்களால் படைக்கப்பட்ட நாலாயிரதிவ்விய பிரபந்தமும் பல்லவர் காலத்தில் எழுதப்பட்ட சமய இலக்கியங்களாகும்.
  • இரண்டாம் நந்திவர்மனால் ஆதரிக்கப்பட்ட பெருந்தேவனார் மகாபாரதத்தை, பாரதவெண்பா எனும் பெயரில் தமிழில் மொழிபெயர்த்தார்.

 

Q6. ராஷ்டிரகூட வம்சம் குறித்த கீழ்க்காணும் கூற்றுகளைச் சிந்தித்து அவற்றில் எவை சரியான கூற்றென்று கண்டறியவும்.

  1. இவ்வம்சத்தை நிறுவியவர் தந்திதுர்கர்.
  2. அமோகவர்ஷர் கவிராஜமார்க்கத்தை எழுதினார்.
  3. முதலாம் கிருஷ்ணர் எல்லோராவில் கைலாசநாதர் கோவிலைக் கட்டினார்.

(a) 1 மட்டும் சரி 

(b) 2, 3 சரி

(c) 1, 3 சரி 

(d) மூன்றும் சரி

S6.Ans.(d)

Sol.

  • மாபெரும் சமஸ்கிருத அறிஞரான தண்டின் முதலாம் நரமிம்மவர்மனின் அவையை அலங்கரித்தார். அவர் தசகுமார சரிதம் எனும் நூலை எழுதினார்.
  • தந்திதுர்க்கர் ராஷ்டிரகூட வம்சத்தை நிறுவியவர் ஆவார். 
  • அமோகவர்ஷரால் இயற்றப்பட்ட கவிராஜமார்க்கம் கன்னட மொழியின் முதல் கவிதை நூலாகும்.
  • எல்லோராவின் குன்றுப் பகுதியில் அமைந்துள்ள  முப்பது குடைவரைக் கோவில்களில் கைலாசநாதர் கோவிலும் ஒன்று.
  • முதலாம் கிருஷ்ணருடைய ஆட்சிக் காலத்தில் இக்கோவில் உருவாக்கப்பட்டது.

 

Q7. கீழ்க்காண்பனவற்றில் எது சரியான இணையில்லை

(a) எல்லோரா குகைகள்ராஷ்டிரகூடர்கள்

(b) மாமல்லபுரம்முதலாம் நரசிம்மவர்மன்

(c) எலிபெண்டா குகைகள்அசோகர்

(d) பட்டடக்கல்சாளுக்கியர்கள்

S7.Ans.(c)

Sol.

  • இந்தியக் கலைக்கு ராஷ்டிரகூடர்கள் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளனர்.
  • ராஷ்டிரகூடர்களின் கலை மற்றும் கட்டிடக்கலைச் சாதனைகளை எல்லோராவிலும் எலிபெண்டாவிலும் காணலாம்.
  • சாளுக்கியர்கள் பெரும் எண்ணிக்கையிலான குடைவரைக்
  • குகைக் கோவில்களையும், கட்டுமானக் கோவில்களையும் கட்டி சிவன்,விஷ்ணு,பிரம்மா ஆகிய கடவுளர்களுக்கு அர்ப்பணித்தனர்.
  • சாளுக்கியர்களின் கட்டுமானக் கோவில்கள் அய்கோல், வாதாபி, பட்டடக்கல் ஆகிய இடங்களில் உள்ளன. 
  • வாதாபி மற்றும் அய்கோலிலுள்ள விஷ்ணு கோவில்கள்,பீஜப்பூர் மாவட்டம் பட்டடக்கல்லிலுள்ள விருப்பாக்ஷா கோவில் ஆகியன கற்களால் கோவில்களாகும். 
  • வாதாபியிலுள்ள விஷ்ணு கோவில் சாளுக்கிய வம்சத்தைச் சேர்ந்த மங்களேசனால் கட்டப்பட்டது. 

 

Q8. தவறான இணையைக் கண்டறியவும்

(a) தந்தின்தசகுமார சரிதம்

(b) வாத்ஸ்யாயர்பாரத வெண்பா

(c) பாரவிகிரதார்ஜுனியம்

(d) அமோகவர்ஷர்கவிராஜமார்க்கம்

S8.Ans.(b)

Sol.

  • மாபெரும் சமஸ்கிருத அறிஞரான தண்டின் முதலாம் நரமிம்மவர்மனின் அவையை அலங்கரித்தார். அவர் தசகுமார சரிதம் எனும் நூலை எழுதினார்.
  • நியாய பாஷ்யா எனும் நூலை எழுதிய வாத்ஸ்யாயர் காஞ்சிக் கடிகையில் ஆசிரியராக இருந்தார்.
  • மற்றொரு சமஸ்கிருத அறிஞரான பாரவி சிம்மவிஷ்ணுவின் காலத்தில் வாழ்ந்தார்.
  • அவர் கிராதார்ஜுனியம் என்னும் வடமொழிக் காப்பியத்தை வடித்தார்.
  • அமோகவர்ஷரால் இயற்றப்பட்ட கவிராஜமார்க்கம் கன்னட மொழியின் முதல் கவிதை நூலாகும்.

 

III. கோடிட்ட இடங்களை நிரப்புக:

  1. ஹர்ஷவர்தனரை நர்மதை ஆற்றின் கரையில் தோற்கடித்தார். (இரண்டாம் புலிகேசி)
  2. வாதாபியை அழித்து வாதாபி கொண்டான் எனப் பட்டம் சூட்டிக்கொண்டார். (முதலாம் நரசிம்மவர்மன்)
  3. அய்கோல் கல்வெட்டின் ஆசிரியர் ஆவார். (ரவிகீர்த்தி)
  4. முதலாம் நரசிம்மவர்மனின் படைத் தளபதியாவார். (பரஞ்சோதி)
  5. , ஆகிய இடங்களில் உள்ள இசைக் கல்வெட்டுக்கள் பல்லவர்களின் இசையார்வத்தை உணர்த்துகின்றன. (குடுமியான்மலை , திருமயம்)

Q9.பொருத்துக:

A.பல்லவர் – 1.கல்யாணி

B.கீழைச் சாளுக்கியர் – 2.மான்யகேட்டா

C.மேலைச் சாளுக்கியர் – 3.காஞ்சி

D.ராஷ்டிரகூடர் – 4.வெங்கி

(a) 2 4 1 3

(b) 3 4 1 2

(c) 2 1 4 3

(d) 4 2 3 1

S9.Ans.(b)

Sol.

  1. வாதாபிச் சாளுக்கியர்கள்
  2. வெங்கிச் சாளுக்கியர்கள் (கீழைச் சாளுக்கியர்கள்)
  3. கல்யாணிச் சாளுக்கியர்கள் (மேலைச் சாளுக்கியர்கள்).

 

  1. சரியா/தவறா:
  2. புகழ்பெற்ற இசைக் கலைஞர் ருத்ராச்சாரியர் முதலாம் மகேந்திரவர்மன் காலத்தில் வாழ்ந்தவர். (சரி)
  3. ராஷ்டிரகூட வம்சத்தின் தலைசிறந்த அரசர் இரண்டாம் புலிகேசி. (தவறு)
  4. மாமல்லபுரம் யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியச் சின்னங்களில் ஒன்றாகும். (சரி)
  5. தேவாரம் ஆழ்வார்களால் இயற்றப்பட்டது. (தவறு)
  6. விருப்பாக்ஷா கோவில் காஞ்சி கைலாசநாதர்கோவிலை மாதிரியாகக்கொண்டு கட்டப்பட்டதாகும். (சரி)

 

**************************************************************************

TNPSC Group 4
TNPSC Group 4
இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
Adda247 TamilNadu Home page Click here
Official Website=Adda247 Click here