Table of Contents
சமண மதத்தின் தோற்றம்:
- உலகத்தின் மிகப்பழமையான, தற்போதும் வாழ்ந்துகொண்டிருக்கும் மதங்களில் சமணமும் ஒன்றாகும்.
- சமணம் 24 தீர்த்தங்கரர்களை மையமாகக் கொண்டது.
- முதல் தீர்த்தங்கரர் – ரிஷபர்.
- கடைசித் தீர்த்தங்கரர் – மகாவீரர்.
- கி.மு. (பொ.ஆ.மு) ஆறாம் நூற்றாண்டில் மகாவீரரின் வழிகாட்டுதலில் சமணம் முக்கியத்துவம் பெற்றது.
சமணம் (Jain) என்னும் சொல் ஜினா (Jina) என்ற சமஸ்கிருத சொல்லில் இருந்து பெறப்பட்டதாகும். அதன் பொருள் தன்னையும், வெளியுலகத்தையும் வெல்வது என்பதாகும். |
இயற்பெயர் – வர்த்தமானர்
பிறப்பு – வைசாலிக்கு அருகேயுள்ள குந்தகிராமம், பீகார்
பெற்றோர் – சித்தார்த்தர், திரிசலா
இறப்பு – பவபுரி-பீகார்
மகாவீரர் (தலைசிறந்த வீரர்):
- வர்த்தமானர் (செழிப்பு என்று பொருள்) ஒரு சத்திரிய இளவரசர்.
- அவர் தன்னுடைய 30வது வயதில் இளவரசர் என்னும் தகுதியைக் கைவிட்டுவிட்டு துறவறம் மேற்கொண்டார்.
- பன்னிரண்டரை ஆண்டுகால கடுமையான தவத்திற்குப் பின்னர் அவர் எல்லையற்ற அறிவை அடைந்தார். இந்நிலைக்கு ‘கைவல்ய‘ என்று பெயர்.
- அதன் பின்னர் அவர் ஜினா (Jina) ஆனார்.
- இவரைப் பின்பற்றியவர்கள் சமணர் (Jains) என்று அழைக்கப்பட்டனர்.
- மகாவீரர் பண்டைய சிரமானிய (Sramanic) மரபுகளை மறு ஆய்வு செய்தார்.
- இவர்தான் உண்மையிலேயே சமணத்தை உருவாக்கியவர் என நம்பப்படுகிறது.
சமணத்தின் தனித்தன்மை வாய்ந்த போதனைகள்
- பிரபஞ்சத்தை உருவாக்கியவர் கடவுள் என்பதை சமணம் மறுக்கிறது.
- அகிம்சை அல்லது அறவழியே சமணத்தின் அடிப்படைத் தத்துவம்.
- முக்தி அடைவது அல்லது பிறப்பு-இறப்பு- மறுபிறப்பு எனும் சுழற்சியிலிருந்து விடுபடுவதே சமணத்தின் இறுதி லட்சியமாகும்.
- இறுதித் தீர்ப்பு என்ற நம்பிக்கையை சமணம் மறுக்கிறது (இறுதித் தீர்ப்பு என்பது யார் சொர்க்கத்திற்கு செல்வது? யார் நரகத்திற்கு செல்வது? என்பதைக் கடவுள் தீர்மானிப்பார் என்ற நம்பிக்கை)
- ஒருவருடைய வாழ்வின் நலன் அல்லது தரம் என்பது அவருடைய கர்மவினையால் தீர்மானிக்கப்படுகிறது என்பதை சமணம் ஆதரிக்கிறது.
***************************************************************************
Adda247 Tamil Nadu Home page | Click here |
Official Website = Adda247 | Click here |
Adda247App | Adda247 Tamil Youtube |
Adda247 Tamil telegram group –TNPSC sure shot selection group
Instagram = Adda247 Tamil