Tamil govt jobs   »   Latest Post   »   General Tamil Quiz For TNUSRB SI

General Tamil Quiz For TNUSRB SI – 25 March 2023

General Tamil is Mandatory for all the state Government Exams. We provide quality daily General Tamil quizzes within the syllabus for those who are preparing for the exams. 

TNPSC, TNUSRB, TNFUSRC போன்ற தேர்வுகளுக்கு தயாராகும் நபர்களுக்கு பாடக்குறிப்புக்குள் மற்றும் தரமான தினசரி வினா விடை குறிப்புகளை நாங்கள் ADDA247தமிழில் தருகிறோம். இது உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தும், தரமான வினாக்கள் உங்களுக்கு நிஜ தேர்வில் கை கொடுக்கும். தினசரி நடப்பு நிகழ்வுகளை தெரிந்து கொண்டு உங்களை நீங்களே மெருகேற்றலாம். இதை உங்களுக்கு மேலும் எளிதாக்க, நாங்கள் உங்களுக்கு உங்கள் தாய் மொழியில்(தமிழில்) தருகிறோம். தொடர் பயிற்சியே வெற்றிக்கான திறவுகோல்.

 

Q1. நீயன்றி மண்ணுண்டோ, விண்ணுண்டோ, ஒளியுண்டோ, நிலவுமுண்டோ – இப்பாடலைப் பாடியவர் யார்?

  1. பாரதியார்
  2. பாரதிதாசன்
  3. தாயுமானவர்
  4. ந. பிச்சமூர்த்தி

Q2. ந. வேங்கட மகாலிங்கம் என்ற இயற்பெயர் கொண்டவர் யார்?

  1. ந. பிச்சமூர்த்தி
  2. ந. கருணாநிதி
  3. உ.வே.சா
  4. ந. மகாலிங்கம்

Q3. இதயத்தில் நாற்காலி , ஒரு வானம் இரு சிறகு என்ற கவிதை நூல்களை படைத்தவர் யார்?

  1. இரா.மீனாட்சி
  2. மு. மேத்தா
  3. தருமு சிவராமு
  4. ந.பிச்சமூர்த்தி

Q4. தமிழக அரசின் பாவேந்தர் பரிசு, தஞ்சைப் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் ஆங்கில இலக்கிய நூல் பரிசு பெற்றவர் யார்?

  1. முடியரசன்
  2. ந.பிச்ச மூர்த்தி
  3. அண்ணா
  4. சிற்பி

Q5. பாரதிக்குப் பின் கவிதை மரபில் திருப்பம் விளைவித்தவை யாருடைய படைப்புகள்?

  1. பாரதிதாசன்
  2. பிரமிள்
  3. ந. பிச்சமூர்த்தி
  4. புலமைப்பித்தன்

Q6. கீழ்க்காணும் நூல்களை இயற்றியோர் எவர்:

(1) என் சரிதம்

(2) சுட்டு விரல்

  1. அப்துல் ரகுமான், தாரா பாரதி
  2. உ.வே.சா., திரு.வி.க
  3. உ.வே.சா., தாரா பாரதி
  4. உ.வே.சா., அப்துல் ரகுமான்

Q7. பொங்கல் வழிபாடு என்ற கவிதையை இயற்றியவர் யார்?

  1. முடியரசன்
  2. ந.பிச்ச மூர்த்தி
  3. அண்ணா
  4. ரா.பி.சேதுப்பிள்ளை

Q8. புதுக் கவிதையை நெடுங் கவிதையாக்க முடியும் என நீரூபித்த கவிதைத் தொகுதி எது?

  1. குடும்ப விளக்கு
  2. கவிராஜன் கதை
  3. கண்ணீர்ப் பூக்கள்
  4. அனிச்ச அடி

 

Q9. சி.சு. செல்லப்பாவால் தொடங்கப் பெற்ற இதழ் எது ?

  1. சுதேசமித்திரன்
  2. எழுத்து
  3. மறைமலையார்
  4. மக்கள் தேசம்

Q10. பால் வீதியை எழுதியவர் யார்?

  1. அப்துல் ரகுமான்
  2. ந. பிச்சமூர்த்தி
  3. சிற்பி
  4. இரா. மீனாட்சி

 

Increase Your Success Rate In The Exams Like TNPSC Group 1, TNPSC Group 2/2A, TNPSC Group 4, TNUSRB, TNFUSRC, மற்றும் அனைத்து தமிழ்நாடு போட்டித் தேர்வுகள்.

DAILY General Tamil Daily Quiz SOLUTIONS

 

S1. ANS (d) 

Sol. ந. பிச்சமூர்த்தி

நீயன்றி மண்ணுண்டோ, விண்ணுண்டோ, ஒளியுண்டோ, நிலவுமுண்டோ – இப்பாடலைப் பாடியவர் ந. பிச்சமூர்த்தி.

ந. பிச்சமூர்த்தி தமிழ் இலக்கிய முன்னோடிகளுள் ஒருவராகக் கருதப்படுபவர். தமிழ்ப் புதுக் கவிதையின் தோற்றுநர் என்று அழைக்கப்படுபவர் பிச்சமூர்த்தி. தத்துவார்த்தம் பிணைந்த கதை சொல்லும் பாணியினை தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர் பிச்சமூர்த்தி. நீயன்றி மண்ணுண்டோ, விண்ணுண்டோ, ஒளியுண்டோ, நிலவுமுண்டோ – இப்பாடலைப் பாடியவர். வழக்கறிஞர் பட்டம் பெற்றுப் பணியாற்றிய பிச்சமூர்த்தி, இந்து அறநிலையத்துறை அதிகாரியாகவும் பணியாற்றியவர். இவரின் படைப்புகள் அனைத்தும் நாட்டுடமையாக்கப்பட்டுள்ளன.

S2. ANS (a) 

Sol. ந. பிச்சமூர்த்தி

ந. வேங்கட மகாலிங்கம் என்ற இயற்பெயர் கொண்டவர் ந. பிச்சமூர்த்தி.

கும்பகோணத்தில் வாழ்ந்த நடேச தீட்சிதர் – காமாட்சியம்மாள் தம்பதியருக்கு நான்காவது குழந்தையாக 1900 ஆகத்து 15 இல் பிச்சமூர்த்தி பிறந்தார். அவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் வேங்கட மகாலிங்கம். ந. பிச்சமூர்த்தி தமிழ் இலக்கிய முன்னோடிகளுள் ஒருவராகக் கருதப்படுபவர். தமிழ்ப் புதுக் கவிதையின் தந்தை என்று அழைக்கப்படுபவர் பிச்சமூர்த்தி. தத்துவார்த்தம் பிணைந்த கதை சொல்லும் பாணியினை தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர் பிச்சமூர்த்தி. வழக்கறிஞர் பட்டம் பெற்றுப் பணியாற்றிய பிச்சமூர்த்தி, இந்து அறநிலையத்துறை அதிகாரியாகவும் பணியாற்றியவர். இவரின் படைப்புகள் அனைத்தும் நாட்டுடமையாக்கப்பட்டுள்ளன.

S3. ANS (b) 

Sol. மு. மேத்தா

இதயத்தில் நாற்காலி, ஒரு வானம் இரு சிறகு என்ற கவிதை நூல்களை படைத்தவர் மு. மேத்தா.

மு. மேத்தா பெரியகுளத்தில் பிறந்தார். இவர் சென்னை மாநிலக்கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். புதுக் கவிதைக்கு ஏற்றம் தந்த கவிஞர்களுள் இவரும் ஒருவராவார். மரபுக் கவிதைகள், புதுக் கவிதைகள், சிறுகதை, நாவல், கட்டுரைகள் முதலியவற்றைப் படைப்பதிலும் வல்லவரான மு. மேத்தா அத்துறைகளில் பதினைந்திற்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ளார். அவருடைய நூல்களுள் “ஊர்வலம்” தமிழக அரசின் முதற் பரிசினைப் பெற்ற கவிதை நூலாகும். இவரது “சோழ நிலா” என்னும் வரலாற்று நாவல் ஆனந்த விகடன் இதழ் நிகழ்த்திய பொன் விழா இலக்கியப் போட்டியில் முதல் பரிசு பெற்றது ஆகும். 

கவிதை நூல்கள்:

  1. கண்ணீர்ப் பூக்கள்
  2. ஊர்வலம் (தமிழக அரசு பரிசு)
  3. அவர்கள் வருகிறார்கள்
  4. நடந்த நாடகங்கள் 
  5. காத்திருந்த காற்று
  6. திருவிழாவில் ஒரு தெருப்பாடகன்
  7. இதயத்தில் நாற்காலி
  8. ஒரு வானம் இரு சிறகு
  9. மனச் சிறகு
  10. நனைத்த வன நாட்கள்
  11. ஆகாயத்தில் அடுத்த வீடு (சாகித்ய அகாடமி விருது)
  12. நாயகம் ஒரு காவியம்
  13. காற்றை மிரட்டிய சருகுகள்

S4. ANS (d) 

Sol. சிற்பி

தமிழக அரசின் பாவேந்தர் பரிசு, தஞ்சைப் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் ஆங்கில இலக்கிய நூல் பரிசு பெற்றவர் சிற்பி.

சிற்பி பால சுப்பிரமணியம் கவிஞர், மொழி பெயர்ப்பாளர், பேராசிரியர், இதழாசிரியர் சிறந்த கவிஞர், புகழ் பெற்ற கல்வியாளர், இலக்கிய இதழாசிரியர் எனப் பன்முகம் கொண்ட ஒரு பல் துறை அறிஞர். மொழி பெயர்ப்புக்காகவும் (2001), படைப்பிலக்கியத்துக்காகவும் (2003) இருமுறை சாகித்திய அகாதமி விருது பெற்றவர். தமிழக அரசின் பாவேந்தர் விருது, குன்றக்குடி ஆதீனம் கபிலர் விருது, திருவனந்தபுரம் தமிழ்ச் சங்க மகாகவி உள்ளூர் விருது, மூத்த எழுத்தாளருக்கான லில்லி தேவசிகா மணி விருது எனப் பல விருதுகள் பெற்றவர். தமிழக அரசின் பாவேந்தர் பரிசு, தஞ்சைப் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் ஆங்கில இலக்கிய நூல் பரிசு பெற்றுள்ளார்.  இவர் பாரதியின் கவிதா மண்டலத்தைச் சேர்ந்த கவிஞர் ஆவார்

S5. ANS (c) 

Sol. ந. பிச்சமூர்த்தி

 பாரதிக்குப் பின் கவிதை மரபில் திருப்பம் விளைவித்தவை ந. பிச்சமூர்த்தியுடைய படைப்புகள்.

இயற்பெயர் = ந. வேங்கட மகாலிங்கம்

புனைபெயர் = ந. பிச்சமூர்த்தி

ஊர் = தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம்

தொழில் = 1924 – 1938 வரை வழக்கறிஞர், 1938 – 1954 வரை கோவில் நிருவாக அலுவலர். 

எழுத்துப் பணி = கதைகள், மரபுக் கவிதைகள், புதுக் கவிதைகள், ஓரங்க நாடகங்கள்.

காலம் = 15.08.1900 – 04.12.1976

புதுக் கவிதையின் இரட்டையர்கள் = பிச்சமூர்த்தி, கு.ப. இராச கோபாலன் (கூறுயவர் = வல்லிக்கண்ணன்) பாரதிக்குப் பின் கவிதை மரபில் திருப்பம் விளைவித்தவை ந. பிச்சமூர்த்தியுடைய படைப்புகள் தமிழ் இலக்கிய முன்னோடிகளுள் ஒருவராகக் கருதப்படுபவர். தமிழ்ப் புதுக் கவிதையின் தந்தை என்று அழைக்கப்படுபவர் பிச்சமூர்த்தி. தத்துவார்த்தம் பிணைந்த கதை சொல்லும் பாணியினை தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர்

S6. ANS (d) 

Sol. உ.வே.சா., அப்துல் ரகுமான்

(1) என் சரிதம்

(2) சுட்டு விரல் நூல்களை இயற்றியோர் – உ.வே.சா., அப்துல் ரகுமான்

S7. ANS (b) 

Sol. ந. பிச்சமூர்த்தி

 பொங்கல் வழிபாடு என்ற கவிதையை இயற்றியவர் ந. பிச்சமூர்த்தி

ந. பிச்சமூர்த்தி தமிழ் இலக்கிய முன்னோடிகளுள் ஒருவராகக் கருதப்படுபவர். தமிழ்ப் புதுக் கவிதையின் தந்தை என்று அழைக்கப்படுபவர் பிச்சமூர்த்தி. தத்துவார்த்தம் பிணைந்த கதை சொல்லும் பாணியினை தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர் பிச்சமூர்த்தி. வழக்கறிஞர் பட்டம் பெற்றுப் பணியாற்றிய பிச்சமூர்த்தி, இந்து அறநிலையத்துறை அதிகாரியாகவும் பணியாற்றியவர். இவரின் படைப்புகள் அனைத்தும் நாட்டுடமையாக்கப்பட்டுள்ளன.

S8. ANS (b) 

Sol. கவிராஜன் கதை

புதுக் கவிதையை நெடுங் கவிதையாக்க முடியும் என நீரூபித்த கவிதைத் தொகுதி   கவிராஜன் கதை.

S9. ANS (b) 

Sol. எழுத்து

சி.சு. செல்லப்பாவால் தொடங்கப் பெற்ற இதழ் எழுத்து.

சி.சு. செல்லப்பா (செப்டம்பர் 29, 1912 – டிசம்பர் 18, 1998) ஒரு எழுத்தாளர் மற்றும் இலக்கிய விமர்சகர். “எழுத்து” என்ற பத்திரிக்கையினைத் தொடங்கி நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் செல்லப்பா. பல நல்ல எழுத்தாளர்களையும் விமர்சகர்களையும் தன் எழுத்து பத்திரிக்கையின் மூலம் ஊக்குவித்தவர் செல்லப்பா. சிறந்த விமர்சகர்களாகவும், எழுத்தாளர்களாகவும் கருதப்படும் வெங்கட் சாமிநாதன், பிரமீள், ந. முத்துசாமி மற்றும் பல எழுத்தாளர்கள் சி.சு. செல்லப்பாவினால் ஊக்குவிக்கப்பட்டவர்கள். தமிழின் சிறந்த நாவல்களாகக் கருதப்படும் வாடிவாசல், “சுதந்திர தாகம்” போன்றவற்றை எழுதியவர் செல்லப்பா. காந்தியக் கொள்கைகளில் மிகுந்த பற்றும் ஈடுபாடும் கொண்டவர். தமிழ் சிறு பத்திரிக்கைகளின் முன்னோடி எழுத்து இதழ். இவர் பிச்சமூர்த்தியின் “புதுக் குரல்கள்” என்ற கவிதை தொகுதியைத் பதிப்பித்து வெளியிட்டார்

S10. ANS (a) 

Sol. அப்துல் ரகுமான்

பால் வீதியை எழுதியவர் அப்துல் ரகுமான்.

அப்துல் ரகுமான் (நவம்பர் 9, 1937 – சூன் 2, 2017), தமிழ்நாட்டைச் சேர்ந்த கவிஞரும், தமிழ்ப் பேராசிரியரும் ஆவார். கவிக்கோ என்று சிறப்பாகக் குறிப்பிடப்படுகிறார். ‘வானம் பாடி’ இயக்கக் கவிஞர்களோடு இணைந்தியங்கியவர். புதுக் கவிதைத் துறையில் நிலை நிறுத்திக் கொண்டவர்களுள் அப்துல் ரகுமான் சிறப்பாகக் குறிப்பிடத் தக்கவர் ஆவார். அவர் பால் வீதி என்ற கவிதைத் தொகுதி மூலம் தம்மை ஒரு சோதனைப் படைப்பாளியாக இனங் காட்டிக் கொண்டார். அத்தொகுதி வெளி வந்த போது கவிதையை நேரடியாகத் தராமல் உவமைகள், உருவகங்கள், படிமங்கள், குறியீடுகள் ஆகியவற்றின் வழி வெளியீட்டு முறையை அமைத்துக் கொண்டார். தமிழில் கவிதைக் குறியீடுகள் குறிந்து ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற்றவர். தமிழில் ஹைக்கூ, கஜல் ஆகிய பிறமொழி இலக்கியங்களை முனைந்ததிலும் பரப்பியதிலும் இவர் குறிப்பிடத்தக்கவர் ஆவார்.

***************************************************************************

இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை

பதிவிறக்கம் செய்யுங்கள்

To Attempt the Quiz on APP with Timings & All India Rank,

Download the app now, Click here

Adda247 பயன்பாட்டில் இந்த வினாடி வினாவை முயற்சிக்க இங்கே கிளிக் செய்து அகில இந்திய தரவரிசையைப் பெறுங்கள்

 Home page Adda 247 Tamil
Latest Notification TNPSC Recruitment 2023
Official Website Adda247

Coupon code –PREP15(Flat 15% off on all Products)

General Tamil Live Classes For Tamil Eligibility Test, TNPSC Group 2 With General Tamil eBook Batch By Adda247
General Tamil Live Classes For Tamil Eligibility Test, TNPSC Group 2 With General Tamil eBook Batch By Adda247

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Tamil Engineering Classes by Adda247 Youtube link

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

Instagram = Adda247 Tamil

FAQs

Q. How does daily quiz in Tamil will help aspirants to score well in competitive exams?

Ans. Tamil is a mandatory paper for all the Tamilnadu State Government Exams. So Practicing with daily quizzes prepares the aspirants to score well in the competitive examination.