Tamil govt jobs   »   Latest Post   »   General Tamil Quiz For TNUSRB SI

General Tamil Quiz For TNUSRB SI – 17 March 2023

General Tamil is Mandatory for all the state Government Exams. We provide quality daily General Tamil quizzes within the syllabus for those who are preparing for the exams. 

TNPSC, TNUSRB, TNFUSRC போன்ற தேர்வுகளுக்கு தயாராகும் நபர்களுக்கு பாடக்குறிப்புக்குள் மற்றும் தரமான தினசரி வினா விடை குறிப்புகளை நாங்கள் ADDA247தமிழில் தருகிறோம். இது உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தும், தரமான வினாக்கள் உங்களுக்கு நிஜ தேர்வில் கை கொடுக்கும். தினசரி நடப்பு நிகழ்வுகளை தெரிந்து கொண்டு உங்களை நீங்களே மெருகேற்றலாம். இதை உங்களுக்கு மேலும் எளிதாக்க, நாங்கள் உங்களுக்கு உங்கள் தாய் மொழியில்(தமிழில்) தருகிறோம். தொடர் பயிற்சியே வெற்றிக்கான திறவுகோல்.

Q1. பொருள்கோள் ………………… வகைப்படும். 

  1. 5
  2. 7
  3. 8
  4. 6

Q2. செய்யுளில் சொற்களைப் பொருளுக்கு ஏற்றவாறு சேர்த்தோ மாற்றியோ பொருள் கொள்ளும் முறைக்கு ……………………………. என்று பெயர்.

  1. பொருள் கோள்
  2. வழா நிலை
  3. அணி
  4. வழுவமைதி

Q3. பாடலின் தொடக்கம் முதல் முடிவு வரை நேராகவே பொருள் கொள்ளுமாறு அமைவது ……………………………. ஆகும்.

  1. ஆற்று நீர்ப் பொருள்கோள்
  2. நிரல் நிறைப் பொருள்கோள்
  3. கொண்டு கூட்டுப் பொருள்கோள்
  4. மொழிமாற்றுப் பொருள்கோள்

 

Q4. ஒரு செய்யுளில் சொற்கள் முறையே பிறழாமல் நிரல் நிறையாக அமைந்து வருவது……………………………..

  1. நிரல் நிறைப் பொருள்கோள்
  2. விற்பூட்டுப் பொருள்கோள்
  3. ஆற்று நீர்ப் பொருள்கோள்
  4. மொழிமாற்றுப் பொருள்கோள்

Q5. நிரல் நிறைப் பொருள்கோள் ……………………………..வகைப்படும்.

  1. இரு
  2. மூன்று
  3. நான்கு
  4. ஆறு

Q6. செய்யுளில் எழுவாயாக அமையும் பெயர்ச் சொற்களை அல்லது வினைச் சொற்களை வரிசையாக நிறுத்தி, அவை ஏற்கும் பயனிலைகளையும் அவ்வரிசைப்படியே நிறுத்திப் பொருள் கொள்ளுதல் ……………………………..ஆகும்.

  1. விற்பூட்டுப் பொருள்கோள்
  2. முறை நிரல் நிறைப் பொருள்கோள்
  3. எதிர் நிரல் நிறைப் பொருள்கோள்
  4. மொழி மாற்றுப் பொருள்கோள்

Q7. செய்யுளில் எழுவாய்களை வரிசைப்படுத்தி அவை ஏற்கும் பயனிலைகளை எதிர் எதிராகக் கொண்டு பொருள் கொள்ளுதல் …………………………….. ஆகும்.

  1. விற்பூட்டுப் பொருள்கோள்
  2. முறை நிரல் நிறைப் பொருள்கோள்
  3. எதிர் நிரல் நிறைப் பொருள்கோள்
  4. மொழிமாற்றுப் பொருள்கோள்

Q8. ஒரு செய்யுளில் பல அடிகளில் சிதறிக் கிடக்கும் சொற்களைப் பொருளுக்கு ஏற்றவாறு ஒன்றோடொன்று கூட்டிப் பொருள் கொள்வது ……………………………..ஆகும்.

  1. கொண்டு கூட்டுப் பொருள்கோள்
  2. ஆற்று நீர்ப் பொருள்கோள்
  3. மொழிமாற்றுப் பொருள்கோள்
  4. நிரல் நிறைப் பொருள்கோள்

Q9. பல அடிகளில் சிதறிக் கிடக்கும் சொற்களைப் பொருளுக்கு ஏற்றவாறு பொருள் கொள்வது ……………………………… பொருள்கோள் 

  1. ஆற்று நீர் பொருள்கோள்
  2. கொண்டு கூட்டு பொருள்கோள்
  3. அளைமறிபாப்பு பொருள்கோள்
  4. நிரல் நிறை பொருள்கோள்

Q10. அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது. – இக்குறளில் பயின்று வந்துள்ள பொருள்கோள் யாது?

  1. முறை நிரல் நிறைப்பொருள்கோள்
  2. கொண்டு கூட்டு பொருள்கோள்
  3. அளைமறிபாப்பு பொருள்கோள்
  4. நிரல் நிறை பொருள்கோள்

 

Increase Your Success Rate In The Exams Like TNPSC Group 1, TNPSC Group 2/2A, TNPSC Group 4, TNUSRB, TNFUSRC, மற்றும் அனைத்து தமிழ்நாடு போட்டித் தேர்வுகள்.

DAILY General Tamil Daily Quiz SOLUTIONS

 

S1. ANS (c) 

Sol.  பொருள்கோள் 8 வகைப்படும்.

பொருள்கோள் எட்டு (நன்னூல்) வகைப்படும். அவை,

  1. ஆற்றுநீர்ப் பொருள்கோள்
  2. மொழிமாற்றுப் பொருள்கோள் (சுண்ணம்தொல்காப்பியர், பாசி நீக்கம்மயிலை நாதர்)
  3. நிரனிறைப் பொருள்கோள்
  4. விற்பூட்டு பொருள்கோள் (பூட்டுவிற் பொருள்கோள்)
  5. தாப்பிசைப் பொருள்கோள்
  6. அளைமறிப் பாப்புப் பொருள்கோள்
  7. கொண்டு கூட்டுப் பொருள்கோள்
  8. அடிமறி மாற்றுப் பொருள்கோள்

S2. ANS (a) 

Sol. பொருள்கோள்

செய்யுளில் சொற்களைப் பொருளுக்கு ஏற்றவாறு சேர்த்தோ மாற்றியோ பொருள் கொள்ளும் முறைக்கு பொருள்கோள் என்று பெயர்யாப்பு முதலிய காரணங்களுக்காகச் சொற்களை முன் பின்னாக மாற்றுதல் முதலிய பல நிலைகளில் சொற்களைச் சேர்த்தும் பிரித்தும் பொருள் கொண்டால் அச்செய்யுளின் பொருள் விளங்கும். இவ்வாறு செய்யுளில் காணப்படும் தொடர்களைப் பொருள் கொள்ளும் முறையை விளக்குவது பொருள்கோள் ஆகும்.

S3. ANS (a) 

Sol. ஆற்று நீர்ப் பொருள்கோள்

பாடலின் தொடக்கம் முதல் முடிவு வரை நேராகவே பொருள் கொள்ளுமாறு அமைவது ஆற்று நீர்ப் பொருள்கோள் ஆகும்.  

சொற்களை அங்கும் இங்கும் மாற்றுதல் முதலிய வழிகளில் பொருள் கொள்வதற்கு இடம் இன்றி, ஆற்று நீர் ஒரே தொடர்ச்சியாக ஒரு திசை நோக்கி ஓடுவதுபோல், செய்யுளில் சொற்கள் உள்ளவாறே வரிசை மாற்றாமல், தொடர்ச்சியாகப் பொருள்கொள்ளும் முறைக்கு ஆற்றுநீர்ப் பொருள்கோள் என்பது பெயர்

S4. ANS (a) 

Sol. நிரல் நிறைப் பொருள்கோள்

ஒரு செய்யுளில் சொற்கள் முறையே பிறழாமல் நிரல் நிறையாக அமைந்து வருவது நிரல் நிறைப் பொருள்கோள் ஆகும்.

ஒரு வரிசையில் உள்ள பொருளை வேறு ஒரு வரிசையில் உள்ள பொருளோடு பொருத்துகிறபோது அவ்வரிசையைப் பொருள் பொருத்தமுறப் பொருத்துவது நிரல் நிறைப் பொருள்கோள் எனப்படும்.

S5. ANS (a) 

Sol. இரு

நிரல் நிறைப் பொருள்கோள் இரு வகைப்படும்.

  1. முறை நிரல் நிறைப் பொருள்கோள்
  2. எதிர் நிரல் நிறைப் பொருள்கோள்

S6. ANS (b) 

Sol. முறை நிரல் நிறைப் பொருள்கோள்

செய்யுளில் எழுவாயாக அமையும் பெயர்ச் சொற்களை அல்லது வினைச் சொற்களை வரிசையாக நிறுத்தி, அவை ஏற்கும் பயனிலைகளையும் அவ்வரிசைப்படியே நிறுத்திப் பொருள் கொள்ளுதல் முறை நிரல் நிறைப் பொருள்கோள் ஆகும்.

 (. கா) “கொடி குவளை கொட்டை நுசுப்பு உண் கண்மேனி, “

இவ்வடியில் கொடி, குவளை, கொட்டை என்ற எழுவாய்ப் பெயர்ச் சொற்களை வரிசைப்படுத்தி அவற்றிற்குரிய பயனிலைகளாக நுகப்பு, கண், மேனி என்று வரிசைப்படுத்தி கொடி நுசுப்பு, குவளைக்கண், கொட்டைமேனி என்று பொருள் கொள்ள வேண்டும். இச்செய்யுளில் முறை பிறழாமல் வரிசை முறையில் சொற்கள் அமைந்து வருவதுமுறை நிரல் நிறைப் பொருள்கோள் ஆகும்.

S7. ANS (c) 

Sol. எதிர் நிரல் நிறைப் பொருள்கோள்

செய்யுளில் எழுவாய்களை வரிசைப்படுத்தி அவை ஏற்கும் பயனிலைகளை எதிர் எதிராகக் கொண்டு பொருள் கொள்ளுதல் எதிர் நிரல் நிறைப் பொருள்கோள் ஆகும்

(.கா) “விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்

கற்றாரோடு ஏனை யவர் (திருக்குறள்)

இக்குறளில் ஓர் அடியில் விலங்கு, மக்கள் என்று எழுவாய்களை வரிசைப்படுத்தி விட்டு, பயனிலைகளாக கற்றார், கல்லாதார் (ஏனையவர்) என வரிசைப்படுத்தியுள்ளனர். அதைக் சுற்றார் மக்கள் என்றும் கல்லாத ஏனையவர் விலங்குகள் என்றும் எதிர் எதிராகச் கொண்டு பொருள் கொள்ள வேண்டும். எனவே இக்குறள் எதிர் நிரல் நிறைப் பொருள்கோள் ஆகும்.

S8. ANS (a) 

Sol. கொண்டு கூட்டுப் பொருள்கோள்

ஒரு செய்யுளில் பல அடிகளில் சிதறிக் கிடக்கும் சொற்களைப் பொருளுக்கு ஏற்றவாறு ஒன்றோடொன்று கூட்டிப் பொருள் கொள்வது கொண்டு கூட்டுப் பொருள்கோள் ஆகும்.

செய்யுளில் உள்ள சொற்களை அவை அமைந்துள்ளவாறே பொருள் கொள்ளாமல், அதன் பல அடிகளிலும் உள்ள சொற்களைத் தேவையான இடங்களில் சேர்த்துப் பொருள் கொள்ளும் முறைக்குக் கொண்டுகூட்டுப் பொருள்கோள் எனப்படும்

S9. ANS (c) 

Sol. அளைமறி பாப்பு பொருள்கோள்

 பல அடிகளில் சிதறிக் கிடக்கும் சொற்களைப் பொருளுக்கு ஏற்றவாறு பொருள் கொள்வது அளைமறி பாப்பு பொருள்கோள் ஆகும்.

அளை + மறி + பாம்பு என்பது அளைமறி பாப்பு என வந்துள்ளது. அளை என்றால் வளை அல்லது புற்று என்று பொருள். பாப்பு என்பது பாம்பு எனப் பொருள்படும். புற்றுக்குள் முதலில் தன் தலையை நுழைக்கும் பாம்பு தன் உடல் முழுவதையும் இழுத்துக்கொண்ட பின் தலையைப் புற்றின் வாய்ப் பகுதியிலும் வாலைப் புற்றின் அடிப்பகுதியிலுமாக மாற்றி வைத்துக் கொள்கிறது. அது போலச் செய்யுளின் முதலில் உள்ள அடியை இறுதியிலும், இறுதியில் உள்ள அடியை முதலிலும் மாற்றிப் பொருள் கொள்ளும் முறைக்கு அளைமறி பாப்புப் பொருள்கோள் என்று பெயர்.

S10. ANS (a) 

Sol. முறை நிரல் நிறைப் பொருள்கோள்

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது. – இக்குறளில் பயின்று வந்துள்ள பொருள்கோள்முறை நிரல் நிறைப் பொருள்கோள்.

ஒரு வரிசையில் உள்ள பொருளை வேறு ஒரு வரிசையில் உள்ள பொருளோடு பொருத்துகிற போது அவ்வரிசையைப் பொருள் பொருத்தமுறப் பொருத்துவது நிரல் நிறைப் பொருள்கோள் எனப்படும்.

இப்பாடலில் முதல் வரிசையில் அன்பு, அறன் கூறப்பட்டுள்ளன. இரண்டாவது வரிசையில் பண்பு, பயன் கூறப்பட்டுள்ளன. இல்வாழ்க்கையில் அன்பு பண்பாகவும், அறன் பயனாகவும் அமைய வேண்டும் என்பது குறளின் கருத்து. இவ்வாறு முதல் வரிசையில் முதலில் உள்ளதோடு இரண்டாம் வரிசையில் முதலில் உள்ளதையும், முதல் வரிசையில் இரண்டாவதாக உள்ளதோடு இரண்டாவது வரிசையில் இரண்டாவது உள்ளத்தையும் பொருத்திப் பார்ப்பது நேர் நிரல் நிறைப் பொருள்கோள் எனப்படும்.

***************************************************************************

இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை

பதிவிறக்கம் செய்யுங்கள்

To Attempt the Quiz on APP with Timings & All India Rank,

Download the app now, Click here

Adda247 பயன்பாட்டில் இந்த வினாடி வினாவை முயற்சிக்க இங்கே கிளிக் செய்து அகில இந்திய தரவரிசையைப் பெறுங்கள்

 Home page Adda 247 Tamil
Latest Notification TNPSC Recruitment 2023
Official Website Adda247

Coupon code –PREP15(Flat 15% off on all Products)

General Tamil Live Classes For Tamil Eligibility Test, TNPSC Group 2 With General Tamil eBook Batch By Adda247
General Tamil Live Classes For Tamil Eligibility Test, TNPSC Group 2 With General Tamil eBook Batch By Adda247

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Tamil Engineering Classes by Adda247 Youtube link

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

Instagram = Adda247 Tamil

FAQs

Q. How does daily quiz in Tamil will help aspirants to score well in competitive exams?

Ans. Tamil is a mandatory paper for all the Tamilnadu State Government Exams. So Practicing with daily quizzes prepares the aspirants to score well in the competitive examination.