Tamil govt jobs   »   Latest Post   »   நடப்பு நிகழ்வு கேள்விகள் மற்றும் பதில்கள்

நடப்பு நிகழ்வு –03 நவம்பர் 2023

நவம்பர் 03  TNPSC மற்றும் மத்திய அரசு தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகள்

இன்றைய முக்கிய நடப்பு நிகழ்வுகள்

  • நம்ம சாலை மொபைல் செயலி
  • 2023 ஆம் ஆண்டின் பிரிட்டிஷ் அகாடமி புத்தக பரிசு வென்றவர்
  • இந்தியாவின் முதல் லாவெண்டர் பண்ணை

நவம்பர் 03ம் தேதி நடப்பு நிகழ்வு கேள்விகள்

1) இந்தியா மற்றும் வங்கதேசம் இணைத்து தொடங்கிய அகௌரா-அகர்தலா ரயில் பாதையின்  நீளம்

a)11.54கிமீ

b)11.76கிமீ

c)12.24கிமீ

d)13.00கிமீ

2) இந்தியாவின் ‘குஷா திட்டம்’ கொண்ட வந்த அமைப்பு

a)இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்

b)பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம்

c)இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ்  நிறுவனம்

d)பாபா அணு ஆராய்ச்சி மையம்

3) 2023 ஆம் ஆண்டின் உலக உணவு இந்தியா 2023- கண்காட்சி நடைபெற உள்ள இடம்

a)ஜெய்ப்பூர்

b)அகமதாபாத்

c)கொல்கத்தா

d)புதுடெல்லி

4) தமிழகத்தின் நம்ம சாலை மொபைல் செயலி தொடங்க பட்ட நாள்

a)அக்டோபர் 30

b)அக்டோபர் 31

c)நவம்பர் 1

d)நவம்பர் 2

5 )ஜோஜிலா நாள்

a)நவம்பர் 1

b)நவம்பர் 2

c)நவம்பர் 3

d)நவம்பர் 4

6) 2023 ஆம் ஆண்டின் பிரிட்டிஷ் அகாடமி புத்தக பரிசு வென்றவர்

a)அலியா ட்ரபுக்கோ

b)நந்தினி தாஸ்

c)சல்மான் ருஷித்

d)கிரண் தேசாய்

7) தென்கிழக்கு ஆசியாவிற்கான உலக சுகாதார அமைப்பின்  புதிதாக நியமிக்கப்பட்ட  பிராந்திய இயக்குனர்

a)சைமா வாஸித்

b)பூனம் கேத்ரபால் சிங்

c)சுஸ்சன்னா ஜக்கப்

d)ஜர்பாஸ் பார்போசா

8) இந்தியாவின் முதல் லாவெண்டர் பண்ணை அமையவுள்ள இடம்

a)இமாச்சல பிரதேசம்

b)சிக்கிம்

c)ஜம்மு காஷ்மீர்

d)அருணாச்சல பிரதேசம்

9) மும்பையின் வான்கடே மைதானத்தில்  யாருடைய சிலை நிறுவப்பட்டது

a)கபில்தேவ்

b)சச்சின் டெண்டுல்கர்

c)சுனில் கவாஸ்கர்

d)மகேந்திர சிங்க் டோனி

10) பத்திரிக்கையாளர்களுக்கு எதிரான தண்டனையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான சர்வதேச நாள்

a)நவம்பர் 1

b)நவம்பர் 2

c)நவம்பர் 3

d)நவம்பர் 4

 

விடைகள்

1)விடை c)12.24கிமீ

வங்கதேசத்துக்கு வழங்கப்பட்ட ரூ.392.52 கோடி இந்திய அரசின் மானிய நிதியுதவியின் கீழ் அகௌரா-அகர்தலா எல்லை தாண்டிய ரயில் இணைப்புத் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வங்கதேசத்தில் 6.78 கி.மீ இரட்டை ரயில் பாதை மற்றும் திரிபுராவில் 5.46 கி.மீ இரட்டை ரயில் பாதையுடன் ரயில் இணைப்பின் நீளம் 12.24 கி.மீ ஆகும். குல்னா-மோங்லா துறைமுக இரயில் பாதைத் திட்டம் இந்திய அரசின் சலுகைக் கடன் திட்டத்தின் கீழ் 388.92 மில்லியன் அமெரிக்க டாலர் மொத்த திட்ட மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் மோங்லா துறைமுகத்திற்கும் குல்னாவில் தற்போதுள்ள ரயில் வலையமைப்பிற்கும் இடையில் சுமார் 65 கி.மீ அகல ரயில் பாதை அமைக்கப்படுகிறது. இதன் மூலம், வங்கதேசத்தின் இரண்டாவது பெரிய துறைமுகமான மோங்லா அகல ரயில் பாதையுடன்  இணைக்கப்படுகிறது. இந்தத் ரயில்வே வழித்தடங்கள்  பிராந்தியத்தில் இணைப்பு மற்றும் எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்தும்.

2) விடை b)பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம்

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட உள்நாட்டு S-400 வான் பாதுகாப்பு அமைப்பை உருவாக்க குஷா திட்டம் நோக்கமாக உள்ளது. இது பாதுகாப்பு தொழில்நுட்பத்தில் தன்னிறைவுக்கான குறிப்பிடத்தக்க மைல்கல் ஆகும். குஷா திட்டத்தின் கீழ் இந்திய பாதுகாப்பு கொள்முதல் மன்றம்  சமீபத்தில்  நீண்ட தூர மேற்பரப்பு ஏவுகணை (LR-SAM) அமைப்பை வாங்க அனுமதித்துள்ளது.LR-SAM= Long Range Surface Air Missile (LR-SAM) system

3)  விடை d)புதுடெல்லி

இரண்டாவது உலக உணவு இந்தியா 2023 கண்காட்சி  புது டெல்லியில் நடைபெற உள்ளது . இந்த நிகழ்வு இந்தியாவை ‘உலகின் உணவு கூடை’ என்று காட்டுவதையும், 2023 ஆம் ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக கொண்டாடுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இது அரசாங்க அமைப்புகள், தொழில் வல்லுநர்கள், விவசாயிகள், தொழில்முனைவோர் மற்றும் பிற பங்குதாரர்களுக்கு விவாதங்களில் ஈடுபடவும், கூட்டாண்மைகளை நிறுவவும், வேளாண் உணவுத் துறையில் முதலீட்டு வாய்ப்புகளை ஆராயவும் ஒரு கட்டமைப்பு மற்றும் வணிக தளத்தை வழங்கும்.

4) விடை c)நவம்பர் 1

“நம்ம சாலை”  மொபைல் செயலி   2023  ஆம் ஆண்டு நவம்பர் 1 அன்று தொடங்கப்பட்டது. ‘விபத்து இல்லாத’ தமிழகம் என்ற இலக்கை அடைவதும் குழியில்லாத சாலைகளை உறுதி செய்வதும் மொபைல் செயலியின் நோக்கம் ஆகும் .இந்த மொபைல் செயலி  பயன்படுத்தி  நெடுஞ்சாலைகளில் உள்ள பள்ளங்களின் புகைப்படங்களை மக்கள் தங்கள் புவியியல்கூறுகளுடன்(Geographical coordinates)பதிவேற்றலாம்.அது அந்தந்த துறைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பள்ளங்கள் சரி செய்யப்படும்.

5) விடை a)நவம்பர் 1

1948 ஆம் ஆண்டு ‘ஆபரேஷன் பைசன்’ போது இந்திய ராணுவ வீரர்களின்  வீரம் நிறைந்த செயல்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, நவம்பர் 1 ஆம் தேதி, ட்ராஸுக்கு என்னும் இடத்தில்  அருகிலுள்ள ஜோஜிலா போர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதாகும்.இது 1948 ஆம் ஆண்டு ‘ஆபரேஷன் பைசன்’ என்ற இந்திய வீரர்களின் துணிச்சலான செயலைக் கொண்டாடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது லடாக்கிற்கான நுழைவாயிலைக் கடந்து செல்லும் சோஜிலாவின் கணவாயில் தொடங்கப்பட்டது இந்த நாள் இந்திய இராணுவத்தின் வரலாற்று வெற்றியை பாகிஸ்தானிய ராணுவ வீரர்கள் , பயங்கரவாதிகள்  மற்றும் ஊடுருவல்காரர்களுக்கு எதிராகக் குறித்தது மேலும் சிறந்த யுக்திகள் மூலம்  சோஜிலா கணவாயை  மீண்டும் இந்திய ராணுவம் கைப்பற்றது  .

6)விடை b)நந்தினி தாஸ்

இந்தியாவில் பிறந்த எழுத்தாளர் நந்தினி தாஸ், ‘Courting India: England, Mughal India, and the Origins of Empire’.என்ற தனது முதல் புத்தகத்திற்காக உலக கலாச்சார புரிதலுக்கான பிரிட்டிஷ் அகாடமி புத்தகப் பரிசை வென்றுள்ளார். இங்கிலாந்து இந்தியாவிற்கு தனது முதலாவது தூதரக பயணத்தின் மூலம் முகலாய அரண்மனைக்குச் சென்றதன் வழியாக  பிரிட்டிஷ் மற்றும் இந்தியாவின் உண்மையான தோற்றக் கதையை இந்த நூல் விளக்குகிறது.

7)விடை  a)சைமா வாஸித்

வங்கதேச  பிரதமர் ஷேக் ஹசீனாவின் மகள் சைமா வாஸித் தென்கிழக்கு ஆசியாவிற்கான WHO பிராந்திய இயக்குநராக (SEARO) தேர்ந்தெடுக்கப்பட்டார். SEARO என்பது தென்கிழக்கு ஆசியா பிராந்திய அமைப்பு  ஆகும் . உலக சுகாதார அமைப்பின் ஆறு பிராந்தியங்களில் ஒன்றாகும்.இதன் தலைமையகம் புது தில்லியில் அமைந்துள்ளது.இந்த பிராந்திய அமைப்பு பொது சுகாதார சவால்களை எதிர்கொள்வதிலும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் சுகாதார முன்முயற்சிகளை மேம்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

8)விடை  c)ஜம்மு காஷ்மீர்

ஊதா புரட்சியை விரிவுபடுத்துவதற்காக ஜம்மு காஷ்மீரின் கத்துவா மாவட்டத்தில் உள்ள சல்லா கிராமத்தில் முதல் லாவெண்டர் பண்ணை அமைக்கப்பட உள்ளது  2018 ஆம் ஆண்டில் அறிவியல் மற்றும் தொழில் ஆய்வு மன்றம் -அரோமா திட்டத்தின்  கீழ் ஜம்மு பிரிவின் மிதமான பகுதிகளில் இந்திய ஒருங்கிணைந்த மருத்துவ நிறுவனம் (IIIM) ஐரோப்பிய லாவெண்டரின் ஒரு பூர்வீக இனத்தை அறிமுகப்படுத்தியது. இது இந்தியாவின் ஊதா புரட்சியின் பிறப்பிடமாக டோடாவுக்கு வழிவகுத்தது.

9)விடை b)சச்சின் டெண்டுல்கர்

மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் கிரிக்கெட்டின் கடவுள் என்று அழைக்கப்படுகின்ற சச்சின் டெண்டுல்கர் சிலை திறக்கப்பட்டது. 2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக இந்த மைதானத்தில் இந்தியாவுக்காக தனது கடைசி டெஸ்ட் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

10) விடை  b)நவம்பர் 2

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 2 ஆம் நாள் பத்திரிக்கையாளர்களுக்கு எதிரான தண்டனையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான  சர்வதேச நாள்   ஆகும் . இது ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக ஊழியர்கள் தங்கள் பணியில் எதிர்கொள்ளும் ஆபத்துகள் மற்றும் வன்முறைகளை எடுத்துக்காட்டுகிறது. ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை நவம்பர் 2 ஆம் தேதியை ‘பத்திரிகையாளர்களுக்கு எதிரான குற்றங்களுக்கு தண்டனை விதிக்கும் சர்வதேச நாள்’ என்று 2013 அன்று அறிவித்தது. 2 நவம்பர் 2013 அன்று மாலியில் இரண்டு பிரெஞ்சு ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டதை நினைவுகூரும் வகையில் இந்த நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது.

 

 

*************************************************************************

நடப்பு நிகழ்வு –02 நவம்பர் 2023_3.1

இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
Adda247 TamilNadu Home page Click here
Official Website=Adda247 Click here