தமிழ் மொழியின் முக்கியமான கேள்விகள் மற்றும் பதில்களைக் கீழே பார்க்கவும். அனைத்து போட்டித் தேர்வுகளிலும் கட்டாய தமிழ் மொழி தேர்வு முக்கியப் பங்கு வகிக்கிறது, இந்தக் கட்டுரையில், TNPSC, TNUSRB மற்றும் TN TRB போன்ற போட்டித் தேர்வுகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும், தமிழ் மொழி குறித்த கேள்விகள் மற்றும் பதில்களை நாங்கள் தருகிறோம்.
TNPSC Group 4 Test Series 2023
தமிழ் மொழி
- பகைநாட்டுப் பசுக்கூட்டங்களைக் கவர நினைப்பவர், எந்தப் பூவைச் சூடிச் செல்வர்? வெட்சிப் பூ
- இட்லிப்பூ என்று அழைக்கப்படுவது? வெட்சிப் பூ
- பூவின் இதழ்களில் பஞ்சு போன்ற நுண்மயிர் படர்ந்துள்ளது? வஞ்சிப் பூ.
- வெட்சி முதல் பாடாண்வரை உள்ளவற்றைப் பாடுவது என்பது எவ்வகைத் திணை? பொதுவியல் திணை.
- புறத்திணைகள் எத்தனை வகைப்படும்? 12
- மண்ணாசை கருதிப் போருக்குச் செல்வது என்பது எவ்வகைத் திணை?வஞ்சித்திணை.
- பாடாண்திணை கூறுவது? ஆண்மகனின் ஒழுக்கலாறுகள்
- ‘ஒருதலைக் காமம்’ என்பது? கைக்கிளை.
- ‘நிரைகவர்தல்’ என்பது எவ்வகைத் திணை? வெட்சித் திணை.
- “தன் நாட்டைக் கைப்பற்ற வந்த மாற்றரசனோடு எதிர்த்துப் போரிடுவது” எவ்வகையான திணை? காஞ்சித் திணை.
- “உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன்” யார்? அதியன்.
- “பொருள்களின் இருப்பைக் கூட அறியாமல் கொடுப்பவன்”யார்? பெருஞ்சாத்தன்.
- சிலப்பதிகாரத்திலும் + மணிமேகலையிலும் அமைந்த பாவினம்? அகவற்பா .
- ‘இவள் தலையில் எழுதியதோ கற்காலம்தான் எப்போதும்’ -இவ்வடிகளில் கற்காலம் என்பது? தலையில் கல் சுமப்பது.
- பூக்கையைக் குவித்துப் பூவே புரிவோடு காக்க என்று யார் – யாருக்காக வேண்டினார்? கருணையன் – எலிசபெத்துக்காக.
- “வாய்மையே மழைநீராகி” – இத்தொடரில் உள்ள அணி? உருவக அணி
**************************************************************************
Adda247 TamilNadu Home page | Click here |
Official Website=Adda247 | Click here |