Tamil govt jobs   »   Latest Post   »   General Tamil Quiz For TNPSC Group...

General Tamil Quiz For TNPSC Group 4 – 5th April 2023

General Tamil is Mandatory for all the state Government Exams. We provide quality daily General Tamil quizzes within the syllabus for those who are preparing for the exams. 

TNPSC, TNUSRB, TNFUSRC போன்ற தேர்வுகளுக்கு தயாராகும் நபர்களுக்கு பாடக்குறிப்புக்குள் மற்றும் தரமான தினசரி வினா விடை குறிப்புகளை நாங்கள் ADDA247தமிழில் தருகிறோம். இது உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தும், தரமான வினாக்கள் உங்களுக்கு நிஜ தேர்வில் கை கொடுக்கும். தினசரி நடப்பு நிகழ்வுகளை தெரிந்து கொண்டு உங்களை நீங்களே மெருகேற்றலாம். இதை உங்களுக்கு மேலும் எளிதாக்க, நாங்கள் உங்களுக்கு உங்கள் தாய் மொழியில்(தமிழில்) தருகிறோம். தொடர் பயிற்சியே வெற்றிக்கான திறவுகோல்.

 

Q1. அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும் இக்குறளில் எதைத் தாழ்ப்பாளால் அடைக்க முடியாது என்று கூறப்படுகின்றது?

  1. கண்ணீர்
  2. அன்பு
  3. நட்பு
  4. இவை அனைத்தும்

Q2. பதினெண் கீழ்கணக்கு நூல்களுள் திருக்குறளுக்கு அடுத்து சிறப்புடைய நூலாக கருதப்படுவது எது?

  1. நான்மணிக்கடிகை
  2. மூதுரை
  3. நல்வழி
  4. நாலடியார்

Q3. “ஈனல்” பெயர் சொல்லின் வகையரிதல்

  1. பண்புப் பெயர்
  2. காலப் பெயர்
  3. தொழிற் பெயர்
  4. சினைப் பெயர்

Q4. பொருத்துக:

நூல் ஆசிரியர்

  1. திருமுருகாற்றுப்படை – 1. நல்லூர் நத்தத்தனார்
  2. பொருநராற்றுப்படை – 2. முடத்தாம கண்ணியார்
  3. பெரும்பாணாற்றுப்படை – 3. நக்கீரர்
  4. சிறுபாணாற்றுப்படை – 4. கடியலூர் உருத்திரங்கண்ணனார்

  (a) (b) (c) (d)

  1. A) 4 3 2 1
  2. B) 3 2 4 1
  3. C) 1 4 3 2
  4. D) 4 3 2 1

Q5. “SACRIFICE” என்ற ஆங்கிலச் சொல்லுக்கு சரியான தமிழ்ச் சொல்லை தேர்ந்தெடு? 

  1. நேர்மை  
  2. தியாகம்  
  3. நாட்டுப் பற்று  
  4. நட்பு

Q6. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக

  1. போக வேண்டும் வழக்கம் கண் மூடி மண் மூடி
  2. வழக்கம் கண் மூடி போக வேண்டும் மண் மூடி
  3. மணி மூடி வழக்கம் கண் மூடி போக வேண்டும்
  4. கண் மூடி வழக்கம் மண் மூடி போக வேண்டும்

Q7. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு.

‘கலிங்கத்துப் பரணி’ முதலாம் குலோத்துங்க சோழனைப் பாட்டுடைத்

தலைவனாகக் கொண்டது!

  1. ‘கலிங்கத்துப் பரணி’ யாரை பாட்டுடைத் தலைவனாகக் கொண்டது?
  2. கலிங்கத்துப் பரணியின் பாட்டுடைத் தலைவன் யார்?
  3. முதல் குலோத்துங்க சோழனைப் பாடிய நூல் எது?
  4. கலிங்கத்துப் பரணி சிற்றிலக்கியமா?

Q8. அவள் மாலையைத் தொடுத்தாள். – எவ்வகை வாக்கியம் என கண்டறிக:

  1.   செய்வினை வாக்கியம்
  2.   தன்வினை வாக்கியம்
  3.   பிறவினை வாக்கியம்
  4.   செயப்பாட்டு வினை வாக்கியம்

Q9. “கொண்டல் கோபுரம் அண்டையில் கூடும் கொடிகள் வானம் படி தர மூடும் – இதில் அமைந்துள்ள இயைபு கண்டறிக

  1. அடி எதுகை
  2. அடி இயைபு
  3. முரண் தொடை
  4. சீர் அளபெடை

Q10. வாழ்க – என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க.

  1.   தொழிற் பெயர்
  2.   வியங்கோள் வினைமுற்று
  3.   வினையாலணையும் பெயர்
  4.   பெயரெச்சம்

Increase Your Success Rate In The Exams Like TNPSC Group 1, TNPSC Group 2/2A, TNPSC Group 4, TNUSRB, TNFUSRC, மற்றும் அனைத்து தமிழ்நாடு போட்டித் தேர்வுகள்.

DAILY General Tamil Daily Quiz SOLUTIONS

S1. ANS (D) குறை கடத்தி பொருளின் வகை

ஒளி உமிழ் டையோடில் உமிழப்படும் ஒளியின் நிறம் குறை கடத்தி பொருளின் வகை சார்ந்தது.

ஒளி – உமிழ் இரு முனையம் (டையோடு) (light-emitting diode) என்பது ஒரு வகை இரு முனையம் ஆகும். இது இரு முனையக் குறை கடத்தியினால் ஆனது. ஆங்கிலத்தில் இதனை எல்.இ. டி (LED) என்று சுருக்கமாக குறிப்பர். இக்கருவிகளில் ஒரு குறைக் கடத்தி இரு முனையக் கருவியில் மின்னோட்டம் பாய்வதால் உள்ளே நிகழும் எதிர் மின்னி புரை மின்னி மீள் சேர்வால் (மீள் கூட்டத்தால்) ஒளி வெளிப்படுகின்றது. இதனூடாக மின்னோட்டம் பாயும் பொழுது இது ஒளியை வெளியிடும். பொருத்தமான மின்னழுத்தம் இதன் முனையங்களுக்கிடையே வழங்கப்பட்டால், எதிர் மின்னிகள் புரை மின்னிகளுடன் மீள் சேர்வால் உருவாகும் ஆற்றல் ஒளியணுக்களாக வெளியிடப்படுகின்றது. இந்த விளைவு மின் ஒளிர்வு எனப்படுகின்றது. வெளியிடப்படும் ஒளியின் வண்ணம் (ஒளியணுவின் ஆற்றல்) குறை கடத்தியிலுள்ள ஆற்றல் இடைவெளியைப் பொறுத்துள்ளது. ஒளி உமிழ் டையோடுகள் பெரும்பாலும் மிகச் சிறியப் (1 மிமீ 2 க்கும் குறைவான) பரப்பில் அமைந்துள்ளதால் ஒளிக் கருவிகளில் இவை ஒன்றிணைக்கப்பட்டு கதிர் வீச்சு பாங்கை ஆராய உதவுகின்றன.  இவை காட்டிகளாக பரவலாக பயன்படுத்தபடுகின்றன. இவை குறைந்த மின் சக்தியை பயன்படுத்துவதால் இவற்றின் பயன்பாடு பெருகி வருகிறது.

S2. ANS (B) HNO3

“அகுவா டார்டிஸ்” என்றழைக்கப்படுவது HNO3  

நைட்ரிக் அமிலம் (HNO3), மிகவும் அரிப்புத் தன்மை கொண்ட, கடுமையான காடிப்புண் உண்டாக்ககூடிய கடுங்காடி. இதனை “வலுவான நீர்” என்னும் பொருளில் “அகுவா டார்டிஸ்” (aqua fortis) என்றும் நைட்டர் சாராயம் (spirit of nitre) என்றும் கூறுவதுண்டு. முதன் முதலில் 1650 ஆம் ஆண்டு கிளாபர் இதனைத் தயாரித்தார். பின்னர் 1784 ஆம் ஆண்டில் கேவண்டிஸ் என்பவர் ஈரங் கலந்த ஆக்சிசன் மற்றும் நைட்ரசன் கலவையை மின் பொறியில் செலுத்தி நைட்ரிக் அமிலம் தயாரிக்கலாம் என்று தெரிவித்தார். நைட்ரிக் அமிலம் தூய்மையாக இருக்கும் பொழுது நிறமற்றதாக இருக்கும், ஆனால் நாள்பட வைத்திருந்தால் நைட்ரசன் ஆக்சைடு சேர்வதால் மஞ்சளாக இருக்கும். நீர்க் கரைசலில் 86% உக்கும் மேலாக நைட்ரிக் காடி இருக்குமானால் அதனை புகையும் நைட்ரிக் காடி என்பர். இது அதனுள் இருக்கும் நைதரசன் டை- ஆக்சைடின் அளவைப் பொருத்து வெள்ளை புகையும் நைட்ரிக் காடி என்றும் சிவப்பு புகையும் நைட்ரிக் காடி என்றும் அழைப்பதும் உண்டு. பொதுவாக நைத்திரிக் அமிலம் ஒரு வன்னமிலமாகும். ஏனெனில் செறிந்த நைத்திரிக் அமிலத்தால் இலகுவில் தாக்கமடையாத செப்பையும் தாக்கமடையச் செய்ய முடியும். மற்றைய உலோகங்களுடன் உக்கிரமாகத் தாக்கமடையக் கூடியது. உயிரினங்களின் தோலில் பட்டால் மற்றைய வன்னமிலங்கள் எவ்வாறு அரிப்படையச் செய்யுமோ அவ்வாறே இதுவும் அரிக்கும். எனினும் ஏனைய வன்னமிலங்களோடு இது கலக்கப்பட்டால் இதன் அமில இயல்பு குறைவடைந்து கார இயல்பு வெளிப்படுத்தும். உதாரணமாக சல்பூரிக் அமிலத்தோடு கலக்கப்பட்டால் இதன் கார இயல்பே வெளிப்படுத்தப்படும். 

S3. ANS (D) சின்கோனா அஃப்ஸினாலிஸ்

மலேரியா நோய்க்கான மருந்து தரும் தாவரம் சின்கோனா அஃப்ஸினாலிஸ்  

S4. ANS (C) அம்பேத்கர்

1932 ல் பூனா ஒப்பந்தத்தில் மகாத்மா காந்தியுடன் ஒப்பந்தம் செய்தவர் அம்பேத்கர்.

பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் (14 ஏப்ரல் 1891 – 6 திசம்பர் 1956) என்றும் பாபாசாகேப் அம்பேத்கர் என்றும் அழைக்கப்படுபவர் இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராக பதவியேற்றவர் ஆவார். உயர் கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் ஆவார். பட்டியல் சாதி மக்களுக்கென கழகம் ஒன்றைத் தொடங்கியவர். பரோடா மன்னருடன் இணைந்து தீண்டாமை ஒழியப் போராடியவர். பொருளாதாரம், அரசியல், வரலாறு, தத்துவம், சட்டம் ஆகிய துறைகளில் தேர்ந்தவர்; ஆசிரியராகவும், இதழாளராகவும், எழுத்தாளராகவும் சமூக நீதிப் புரட்சியாளராகவும் விளங்கியவர். ‘நவ புத்தம்’ என்ற பெயரில் பல ஆயிரக்கணக்கான பட்டியல் சாதி மக்களை புத்த சமயத்தைத் தழுவச் செய்தவர்; இவை யாவற்றுக்கும் மேலாக இந்திய அரசியலமைப்புச் சாசனத்தை வரைவதற்கான குழுவின் தலைவராகவும் பொறுப்பேற்றவர். 2012 ஆம் ஆண்டில் வரலாற்றுத் தொலைக்காட்சியும், சி. என். என் – ஐ.பி. என் தொலைக்காட்சியும் நடத்திய வாக்கெடுப்பில் மிகச் சிறந்த இந்தியராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தியாவின் மிகச் சிறந்த உயரிய விருதான ‘பாரத ரத்னா’ விருது இவரது இறப்புக்குப் பின் 1990 இல் இவருக்கு வழங்கப்பட்டது. தாழ்த்தப்பட்டவர்களிடம் அம்பேத்கருக்கு இருந்த ஆதரவாலும், செல்வாக்காலும் பிரித்தானிய அரசால் இவர் 1932 ம் ஆண்டு இலண்டனில் நடை பெற்ற இரண்டாம் வட்ட மேசை மாநாட்டுக்கு அழைக்கப்பட்டார். அம்பேத்கர் தாழ்த்தப்பட்டவர்களுக்கு தனி வாக்காளர் தொகுதி வேண்டும் (தாழ்த்தப்பட்டவர்களுக்கான தொகுதியில் தாழ்த்தப்பட்டவர் மட்டுமே வாக்களிக்க முடியும்) என்று கோரியதை காந்தி கடுமையாக எதிர்த்தார். இக்கோரிக்கை இந்து சமுகத்தை இரண்டு குழுக்களாக பிரித்து விடும் என்று அஞ்சினார். பிரித்தானியர்கள் அம்பேத்கரின் கோரிக்கையை ஏற்று தாழ்த்தப்பட்டவர்களுக்கு என்று தனி தொகுதி ஒதுக்கினர். இதை எதிர்த்து காந்தி உண்ணாவிரதம் மேற்கொண்டு கைதானார். அவர் புனேவிலுள்ள ஏர்வாடா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த உண்ணாவிரதத்தால் நாட்டில் குழப்பம் ஏற்பட்டது. மதன் மோகன் மால்வியா, பால்வான்கர் பாலோ போன்ற தலைவர்கள் அம்பேத்கருடன் பேச்சு வார்த்தை நடத்தினர். தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராக பெரும் வன்முறை ஏற்படலாம் என்று கூறப்பட்டதால் அம்பேத்கர் காந்தியுடன் உடன்பாடு செய்து கொண்டார். இதைத் தொடர்ந்து காந்தி தன் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார். அம்பேத்கர் தாழ்த்தப்பட்டவர்களுக்கு தனி தொகுதி வேண்டும் என்ற கோரிக்கையை கைவிட்டார் இது புனே உடன்படிக்கை எனப்படும். இதன் படி தாழ்த்தப்பட்டவர்களுக்கு என தனி தொகுதிகள் ஒதுக்கப்படும் என்றும் அதில் அனைவரும் வாக்களிக்கலாம் என்றும் முடிவாகியது.

S5. ANS (C) மூன்றாம் சங்கம்

 இன்றைய மதுரையில் பாண்டிய மன்னர்கள் அமைத்திருந்த தமிழ் சங்கம் மூன்றாம் சங்கம்.

மதுரையில் பாண்டிய மன்னர்கள் அமைத்திருந்த தமிழ் சங்கம் மூன்றாம் சங்கம். கபாடபுரமும் கடலால் அழிந்த பிறகு தற்போது உள்ள மதுரையில் கடைச் சங்கம் எனப்படுகின்ற மூன்றாம் சங்கம் தொடங்கப் பெற்றது. இரண்டாம் சங்கத்தை நடத்தி, கபாடபுரம் அழியும் போது அங்கிருந்து பிழைத்து வந்த முடத் திருமாறனால் இது, தொடங்கப் பெற்றது. இச்சங்கம் முடத் திருமாறன் முதலாக உக்கிரப்பெருவழுதி ஈறாக 49 அரசர்களால் நடத்தப் பெற்றது. 1850 ஆண்டுகள் இச்சங்கம் நடைபெற்றது. இச்சங்கத்தில் சிறுமேதாவியார், சேந்தம் பூதனார், அறிவுடையரனார், பெருங்குன்றூர்க் கிழார், இளந்திரு மாறன், மதுரை ஆசிரியர் நல்லந்துவனார், மருதன் இளநாகனார், நக்கீரனார் என 449 புலவர்கள் பாடினர். இதில் எழுதப்பட்ட நூல்கள் அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை, புறநானூறு, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, கலித்தொகை, பரிபாடல் போன்றவை ஆகும்.

S6. ANS (C) சீவக சிந்தாமணி

45 இடங்களில் நாடகத்தைப் பற்றிய குறிப்புகள் உள்ள நூல் சீவக சிந்தாமணி.

சீவக சிந்தாமணி என்பது சங்க காலத்துக்குப் பின்னர் தோன்றிய ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று. சோழர் காலத்தில் எழுதப்பட்டது. திருத்தக்க தேவர் என்னும் சமண முனிவரால் இயற்றப்பட்ட இக் காப்பியம் சீவகன் என்பவனின் அக வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது. சிலப்பதிகாரம், மணிமேகலை என்னும் தமிழில் தோன்றிய முதல் இரு காப்பியங்களாகக் கருதப்படும், கதையை அடிப்படையாகக் கொண்ட இலக்கியங்களைத் தொடர்ந்து மூன்றாவதாக உருவான கதை கூறும் தமிழ் இலக்கியம் இது. எனினும் முன்னையவற்றைப் போலன்றிச் சீவக சிந்தாமணி விருத்தப்பாக்களால் ஆனது. இதனால் விருத்தப் பாக்களால் ஆன முதல் தமிழ்க் காப்பியமாகவும் இது திகழ்கின்றது. 45 இடங்களில் நாடகத்தைப் பற்றிய குறிப்புகள் உள்ள நூல். சீவக சிந்தாமணி,” மூவா முதலா உலகம் ” எனத் தொடங்கும் கடவுள் வாழ்த்தோடு தொடங்குகிறது. இந்நூலில் நா மகள் இலம்பகம் முதலாக முத்தி இலம்பகம் ஈறாக, 13 இலம்பகங்களைக் கொண்டு திகழ்கின்றது. இலம்பகம் யாவும் மகளிர் பெயரினையே பெற்றுள்ளன. ஒவ்வோர் இலம்பகத்திலும் ஒரு மண நிகழ்ச்சி கூறப்பட்டுள்ளது. இலக்கியச் சிறப்பு மிக்க இந்நூலில் 3145 பாடல்கள் உள்ளன. விருத்தம் என்னும் பா வகையால் பாடப் பெற்றது. 

S7. ANS (C) கோதுமை

 சிந்து சமவெளி மக்களின் முக்கிய உணவு கோதுமை.

சிந்து சமவெளி நாகரிகம் மெசொப்பொத்தேமியா, சீனா போன்ற இடங்களில் தழைத்தோங்கியிருந்த, உலகின் மிகப் பழைய நாகரிகங்களையொத்த தொன்மையான ஒரு நாகரிகமாகும். இன்றைய பாகிஸ்தானிலுள்ள சிந்து நதியை அண்டித் தழைத்தோங்கியிருந்த இந்த நாகரிகம் மிகப் பரந்ததொரு பிரதேசத்தில் செல்வாக்குச் செலுத்தி வந்தது. கி. மு 3000 க்கும் கி. மு 2500 க்கும் இடைப்பட்ட காலப் பகுதியில் உச்ச நிலையிலிருந்த இந்த நாகரிகம், இன்னும் தெளிவாக அறியப்படாத ஏதோவொரு காரணத்தினால் சடுதியாக அழிந்து போய்விட்டது. இங்கு வாழ்ந்த மக்களினம் பற்றியோ, அவர்கள் பேசிய மொழிகள் பற்றியோ ஆய்வாளர்களிடையே கருத்தொற்றுமை கிடையாது. தொல்லியல் ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்ட பெரும் எண்ணிக்கையிலான முத்திரைகள் காணப்படுகின்ற, அவர்களுடைய மொழியை எழுதப் பயன்படுத்திய குறியீடுகளையும் எவரும் இன்றும் வாசித்தறிய முடியவில்லை. சிந்து சமவெளி பகுதிகளில் வாழ்ந்த மக்கள் எந்த இனத்தை சேர்ந்தவர்கள் என்பது பற்றி உறுதியாக அறிந்து கொள்வதற்கான சான்றுகள் இன்னும் கிடைக்கவில்லை. சிந்து சமவெளி மக்களின் முக்கிய உணவாக மாட்டிறைச்சி இருந்துள்ளது, தொல்லியல் ஆய்வு ஒன்றின் மூலம் தெரிய வந்துள்ளது. சிந்து சமவெளி மக்களின் முக்கிய உணவு கோதுமை ஆகும். உலகின் மிகப் பழமையான நாகரிகங்களில் ஒன்றான சிந்து சமவெளி நாகரிகம் 4,500 ஆண்டுகள் முதல் 8,000 ஆண்டுகள் பழமையானதாக கருதப்படுகிறது. சிந்து வெளி பண்பாட்டுக்கு உரியவர்கள் திராவிட இனத்தவர்களே என ஒரு சாராரும், இல்லை ஆரியரே என இன்னொரு பகுதியினரும் கூற வேறு பலர் பலவிதமான கலப்பினக் கொள்கைகளையும் முன் வைத்துள்ளனர்.

S8. ANS (D) முகமது பின் காசிம்

 இந்தியாவின் மீது படையெடுத்த முதல் முஸ்லிம் மன்னர் முகமது பின் காசிம்.

முதல் முதலில் இந்திய மண்ணில் கால் பதித்த முஸ்லீம் வீரர் முஹம்மது பின் காசிம் என்பவர். தனது பதினேழாவது வயதில் அவர் இந்த சாதனையை செய்தார். இவர் தைமூ ருக்கு முன் ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். தனது படையுடன் சிந்து மாகாணத்தில் நுழைந்து வெற்றி கொண்டு சிறப்பாக ஆட்சி செய்தார். 695 ல் அரேபியாவின் தாயிஃப் நகரத்தில் பிறந்தவர் முஹம்மது பின் காசிம். உமய்யாத்களுக்காக மேற்கு பஞ்சாப், சிந்து போர்களை நடத்தியவர். தாகீஃப் என்னும் குலப் பிரிவை சேர்ந்தவர். இவர் தந்தை பெயர் காசிம் பின் யூசுஃப், முஹம்மது பின் காசிம் இளமையாக இருக்கும் போதே தந்தையை இழந்தவர். இவரது நெருங்கிய உறவினரும் (சிறிய தந்தை) உமய்யாத் கவர்னராக இருந்த அல் ஹஜ்ஜாஜ் இப்ன் யூசுஃப் அல் தகாஃபி என்பவர் காசீமை வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். நிர்வாகம், போர் பயிற்சி போன்றவற்றை சிறிய வயதிலேயே கற்று தேர்ந்தார். அல் ஹஜ்ஜாஜின் மகள் சுபைதாவை மணந்து கொண்டார். இவரின் இன்னொரு நெருங்கிய உறவினர் முஹம்மது பின் யுசுஃப் என்பவர் ஏமனில் கவர்னராக இருந்தார். அல் ஹஜ்ஜாஜின் வழி காட்டுதலில் பெர்ஷி யாவின் கவர்னராக நியமிக்கப்பட்டு அங்கு நடந்த உள் நாட்டு கலவரத்தை திறமையாக அடக்கி புகழ் பெற்றார். முஹம்மது பின் காசிம் மூலம் உமய்யாத்கள் சிந்துவைக் கைப்பற்றியதற்கு இரு வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. பெர்ஸினின் கூற்றுப்படி சிந்துவிலிருந்து ராஜா தஹீர் என்பவர் மூலம் முஸ்லீம் வணிக கப்பல்கள் துருக்கி கந்தாராவிலிருந்து கைபர் கண வாயைக் கடக்கும் போதெல்லாம் தாக்கப்பட்டும், முஸ்லீம் ஆண், பெண்கள் சிறைப் பிடிக்கப்பட்டும் வந்தனர். மேலும், சிந்துவைக் கைப்பற்றுவதால் கந்தாராவிற்கு செல்ல இன்னுமொரு வழி சுலபமாகும் போன்ற காரணத்திற்காக சிந்துவை கைப்பற்றினார்கள். அடுத்து விங்க்கின் கூற்றாவது, சிந்துவிலிருந்த மெட்ஸ் என்னும் பழங்குடியினர் டிக்ரிஸ் நதியிலிருந்து இலங்கை செல்லும் கடல் வழியில் கட்ச், டிபால் மற்றும் கதியாவார் போன்ற மெட்ஸ்களின் தளங்களிலிருந்து அரபுக்களின் கப்பல்களை கொள்ளையடித்து வந்தனர். மேலும், டிபால், கட்ச் பகுதிகளை வெல்வதின் மூலம் இந்தியாவிற்கான வாணிப வழியும் சுலபமாகும் என்ற காரணத்தாலும், அல் ஹஜ்ஜாஜ் கவர்னராக இருந்த போது இலங்கையிலிருந்து அரேபியா திரும்பிக் கொண்டிருந்த பெண்கள் நிறைந்த கப்பல் ஒன்றை மெட்ஸ்கள் கடத்திச் சென்றனர். இதனால் அல் ஹஜ் ஜாஜ் தன் உறவினரான முஹம்மது பின் காசிம் தலைமையில் ஒரு படையை அனுப்பி சிந்துவைக் கைப்பற்ற உத்தரவிட்டார்.

S9. ANS (D) மின்னழுத்தத்தை மாற்றுகின்றது

ஒரு மின் மாற்றியானது மின்னழுத்தத்தை மாற்றுகின்றது.

மின்மாற்றி என்பது உயர் அல்லது தாழ் மின்னழுத்ததில் உள்ள மின்னாற்றலை தேவைக்கேற்ப தாழ் அல்லது உயர் மின்னழுத்தத்தில் மாற்றும் ஒரு மின் கருவி. குறிப்பாக மின் ஆற்றல் உண்டாக்கும் நிலையங்கள் உயர் மின்னழுத்தில் நீண்ட தொலைவில் இருந்து செலுத்தும் மின் ஆற்றலைத் தேவைக்கேற்ற மின்னழுத்துக்கு மாற்ற மின் மாற்றிகள் பயன்படுகின்றன. மின்னாற்றலை உயர் மின்னழுத்தில் மாற்றிச் செலுத்தினால் மின் கம்பிகள், மின் வடங்களில் பாயும் மின்னோட்டம் குறைவாக இருப்பதால், மின்னாற்றலை இடத்து இடம் செலுத்தும் பொழுது ஆற்றல் வீணாவதை தடுக்கின்றது. ஒரு சுருளின் (சுருணையின்) வழியே மின்னோட்டம் பாயும் பொழுது அதனைச் சூழ்ந்துள்ள காந்த ஆற்றல், அச்சுருளின் அருகே காந்தப் புலத்தால் பிணைக்கப்பட்டுள்ள மற்றொரு சுருளில் (சுருணையில்) மின்னோட்டமாகத் தூண்டப்படுகின்றது. பொதுவாக, ஓர் இரும்பு உள்ளகத்தை இரு வேறு கம்பி சுருள்கள் சுற்றியதே மின் மாற்றியின் பொது அமைப்பு ஆகும். இரு கம்பி சுருள்களுக்கும் இடையே நேரடியான மின்னோட்டத் தொடர்பு இருக்காது, ஆனால் காந்த புலத்தின் ஊடாகவே தொடர்பு இருக்கும்.

S10. ANS (D) வரிக் கண்ணோட்டம்

தொலை நகலியினால் அனுப்ப வேண்டிய அச்சடித்த ஆவணத்தை மின்னலைகளாக மாற்றும் முறை வரிக் கண்ணோட்டம்.

ஃபாக்ஸ் என்ற சொல் (தமிழில் தொலைப் பிரதி அல்லது தொலை நகல்) இலத்தீன் மொழிச் சொல்லான ஃபாஸ்சி மெயில் என்ற சொல்லில் இருந்து உருவானது, அதன் பொருள் “ஒரே போல உருவாக்குவது அல்லது செய்வது”, (அதாவது “ஒரு நகலை எடுப்பது” என்பதாகும்) மேலும் இது ஒரு தொலைத் தொடர்பு கொள்வதற்கான தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி ஆவணங்களின் நகல்களை (தொலைப் பிரதிகளை) எடுக்க பயன்படுவதாகும், அதுவும் குறிப்பாக தொலை பேசி இணையம் மூலம் எளிதாக இயலும் அளவிலுள்ள கருவிகளைப் பயன்படுத்தி ஆவணங்களின் நகலெடுப்பதாகும். அதே போல, டெலி ஃபாக்ஸ், என்ற சொல் டெலி ஃபாஸ்சி மெயில் என்ற சொல்லின் சுருக்கமாகும், அதன் பொருளானது “தூரத்தில் இருந்து நகலெடுப்பதாகும்”. தொலை தூரங்களிலுள்ள மக்களுக்கு ஆவணங்களை அனுப்பும் பொழுது, தபால் துறை மூலமாக அனுப்புவதை விட தொலைப் பிரதிகள் மூலமாக அனுப்புவது சிறந்தது, தொலை நகலியினால் அனுப்ப வேண்டிய அச்சடித்த ஆவணத்தை மின்னலைகளாக மாற்றும் முறை வரிக் கண்ணோட்டமாகும். தொலை நகல் என்பது குறியாக்க தரவு ஒரு முறை, ஒரு தொலை பேசி வரி அல்லது வானொலி ஒலி பரப்பு வழியாக அதை கடந்து, மற்றும் உரை, வரி வரைபடங்கள், அல்லது ஒரு தொலை இடத்தில் புகைப்படங்களை ஒரு கடின நகலை பெறும்.

***************************************************************************

இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை

பதிவிறக்கம் செய்யுங்கள்

To Attempt the Quiz on APP with Timings & All India Rank,

Download the app now, Click here

Adda247 பயன்பாட்டில் இந்த வினாடி வினாவை முயற்சிக்க இங்கே கிளிக் செய்து அகில இந்திய தரவரிசையைப் பெறுங்கள்

 Home page Adda 247 Tamil
Latest Notification TNPSC Recruitment 2023
Official Website Adda247

Coupon code – APR15(Flat 15% off on all Products)

General Tamil Live Classes For Tamil Eligibility Test, TNPSC Group 2 With General Tamil eBook Batch By Adda247
General Tamil Live Classes For Tamil Eligibility Test, TNPSC Group 2 With General Tamil eBook Batch By Adda247

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Tamil Engineering Classes by Adda247 Youtube link

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

Instagram = Adda247 Tamil